புகை மூட்டம் |
நடுக்கத்துடன் |
இளங்குஞ்சு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
கசக்கி எறிந்த குப்பையில் |
சிரிக்கிறது |
அழகு ஓவியம்...! |
அளவற்ற உலகம் |
அளந்தே வைத்தான் |
வயிற்றை ....! |
காட்சி தரும் கடவுள் |
ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
கட்டண சலுகை ...! |
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு.' |
கதவுகளற்ற வாசல் |
மூடிச் செல்கிறது |
மனஅழுத்தம்...! |
சாலை வியாபாரிக்கு |
வாசம் வீசுகிறது |
காகித பூ ...! |
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...