மௌன காவியம் ...!


இதயம் என்ன முள்ளா - உன்
இமைகள் இரண்டும் கல்லா - நீ 
உயிரைத் தாண்டி போகையில் - நான் 
உடைந்து போகிறேன் சில்லாய்
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே
நீ என் முன்னே முன்னே முன்னே
வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய்
என்று கடவுளிடம் கேட்கின்றேன்
வழுக்கி விழுந்தேன் வார்த்தையில்
வாரி அணைத்தாய் வாழ்க்கையில் 
இயற்கை மட்டும் இசைத்திருந்தால்
இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே )
மௌனம் வரைந்த ஓவியத்தை
மழைகள் கூட அழிப்பதில்லை
அந்த தடத்தில் இறக்கின்றேன்
அழுது புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )

(முதல் முறையாக கவிதையில் இருந்து பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் நிறை குறைகள் இருப்பின் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் )

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145