எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!




ஆதி மனிதனின் விவசாயத்தை 
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ 
புண்ணிய தீர்த்தத்தில் 
புலன் பெயரும் பொக்கிச விதை நீ 
துருவ நட்சத்திரங்கள் பருவமடையப் 
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ 
அனல் பறக்கும் பூமியைக் 
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ 
மண்ணையும் பொன்னாக்கும் மழை  நீரை 
வீணாக்காப் பருவ பயிர் நீ 
அறுவடையின் அவசியத்தை 
அச்சில் பொறித்த ஆலயமணி நீ 
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம் 
பல்  தொழில் சேவையாற்ற வந்த  அட்சயப் பாத்திரம் நீ  
காலத்தை அளந்து காலனையும் 
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ 
அன்று கருவிலே அறிந்ததால் தான் என்னவோ 
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் )
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன் 
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? 
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு 
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...!

3 comments:

  1. எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    வாழ்க பல்லாண்டு
    வளர்க வேளாண் ஆண்டு ...

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145