அழியும் உடலில்
அழகுடன் மெருகேறிய
ஆத்மாவில்
அசையும் பொருளாய்
இசையும் மொழியாய் என்
இதயத்தில் நுழைந்த
ஞான சொருபமே
உன்னை எண்ணி
கண்ணை மூடி
தவமிருக்கிறேன்
என்னை போல் ஓர்
உருவம் இம் மண்ணில்
ஜனனம் எடுக்க
மரணம் தொடரும் முன்
மாங்கல்யம் தந்து என்
பெண்மையின் மென்மையாய்
விளக்கேற்றும் காதல் பள்ளிக்கு
அழைத்துச் செல்ல
வரம் தருவாயா சொல்
உன் வலக்கரம் பற்றுகிறேன்
உன் வாழ்நாள் முழுவதும் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...