அருவி இதழில் எண் - 12



ஆறில் விதைத்தது 
அறுபதில் அறுவடை 
முடியாத வரவும் செலவும்..

பாயும் வாகனத்தில் 
தூய காற்றும் துயரப்படுகிறது 
கண்ணுள்ள மனிதனால் 

எண்ணங்கள் ஆயிரம் 
வண்ணங்கள் நூறாயிரம் 
முடிவில்லா ஆசை ....!

ஆவிகளின் கண்ணீர் 
நீராக பிறக்கிறது 
மழை துளி.....!

மனதை விட அதிகமாய் 
வலித்தது மானம் 
இதயமற்ற பெண்களால் .....!

காணமுடியா இசையில் கூட 
கருணை மறைந்திருக்கிறது 
காற்றின் அசைவில் .....!

மழையில் பிரசவம் 
ஒரே செல் காளான் 
மனிதனுக்கு நல் மருந்து.

தினமும் ஒரு முறை 
பிறக்கும் இறக்கும் 
முடிவில்லா எண்ணிக்கை.

அடிக்கும் இமைகள் 
இடியே இல்லாமல் 
பொழிகிறது மழை



4 comments:

  1. சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  3. அருவி இதலில் கவி அருவியை தந்த அக்கா
    அருவில் நனைந்த அனுபவம் புதுமை

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145