சென்ரியுவாய்த் திருக்குறள்-191-200


குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்.
வெறுப்பின் 
முதல் படி 
பயனற்ற சொல் 
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.
தீமையை விடக் கொடியது 
பலர் முன்  
பயனில்லா சொல் 
குறள் 193:
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.
பயனற்ற சொற்களை 
விளக்கி பேசுபவன் 
நீதியற்றவன் 
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பண்பற்ற பயனை 
பலரிடமும் சொன்னால்
மகிழ்ச்சி குலையும் 
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.
இனிய குணம்  
கசந்த சொற்கள் 
மதிப்பில்லா நிலை 
குறள் 196:
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் 
மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொல்லால் 
பயன் பெற நினைப்பவன் 
மக்களுள் பதர் 
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.
அநீதிக்கு முன் 
பயனனுற்ற சொல் 
நல் சான்றோர் 
குறள் 198:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.
அரிய பயன்களை
பேசும் பண்புள்ளவர் 
சிறந்த அறிஞர் 
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த 
மாசறு காட்சி யவர்.
மயக்கத்திலும் 
தெளிந்த சொல் 
மாசற்ற அறிவுடையவர் 
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.
நாவின் முப்பயன் 
பயனைற்றதை விடுத்து 
பயன் பெற பேசுதல்  

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145