சென்ரியுவாய்த் திருக்குறள் 76 to 80


குறள் 76: 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை.
அறத்திற்கும் 
மறத்திற்கும்
அன்பே துணை 
குறள் 77: 
என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.
புழுவைப்போல் வெயிலில் 
காயிந்து இறப்பான் 
அறத்தை மறந்தவன்
குறள் 78: 
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.
பட்டுப் போன அன்பு 
பாலைவனமானது 
வாழ்க்கை...!
நீண்ட ஆயுள் 
நிறைந்த வாழ்வு 
அன்பு செய்
குறள் 79: 
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
புறத்தில் உலக அழகி 
அகத்தில் ராட்ச்சசி 
பயனில்லா வாழ்க்கை 
குறள் 80: 
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.
உடம்பு உயிர் தோள் 
கவசக் குண்டலம் 
அன்பு 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145