ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்: குறள் 101: |
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
வானகமும் ஆற்றல் அரிது. |
பெருமைக்கு உதவாமல் |
வறுமைக்கு உதவுபவன் |
வான் வையகதிற்கு ஈடு ஆக |
குறள் 102: |
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
ஞாலத்தின் மாணப் பெரிது. |
உயிருக்கு போராடும் தருணத்தில் |
கைமாறு கருதா உதவி |
பூமியை விட மிகப் பெரியது |
குறள் 103: |
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
நன்மை கடலின் பெரிது. |
பிறர் மொய் நாடாமல் |
பெருமையற்று செய்யும் உதவி |
கடலை விட பெரியது...! |
குறள் 104: |
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
கொள்வர் பயன்தெரி வார். |
தர்கசமயத்தில் செய்யும் உதவி |
பயன் பெற்றோர் |
போற்றுவார் வானளவு |
குறள் 105: |
உதவி வரைத்தன்று உதவி உதவி |
செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
வாங்கிய உதவிக்கு மேல் |
பொருள் உதவுவது |
இருவரின் சிறந்த பண்பளவு...! |
குறள் 106: |
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
நேர்வழி நட்பு |
துன்பத்தில் தூக்கிவிட்ட நட்பு |
இரண்டையும் மறப்பது தவறு...! |
குறள் 107: |
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
விழுமந் துடைத்தவர் நட்பு. |
ஜென்மமெல்லாம் புகழ் பெற |
அடுத்தவரின் |
துன்பத்தை போக்குக |
குறள் 108: |
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
அன்றே மறப்பது நன்று. |
இதயத்தின் நல் அறம் |
நல்லதை மறக்காமல் |
கெட்டதை மறப்பது |
குறள் 109: |
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
கொலையளவு தீமை |
செய்தாலும் அவரின் |
முன் நன்மை மறவாதே |
குறள் 110: |
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
பாவத்தை அழிக்கும் வழி |
பிறரின் நன்மையை |
மறக்காதிருந்தால் |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 101 to 110
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...