சென்ரியுவாய்த் திருக்குறள் - 71 to 75


குறள் 71: 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும். 
 ஹிஷாலீ சென்ரியு                           
இதயத்  தாழ்பாள் 
மெருகேறும் நேரம் 
அன்பின் வாசல் கண்ணீராகும் 
வானளவு துன்பம் 
கடுகளவும் இன்பம் 
அடக்கம் கண்ணீரில் 
குறள் 72: 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு. 
ஹிஷாலீ சென்ரியு  
உடல் பொருள் ஆவி 
அற்பணிக்கும் பிறப்பு 
உயிரின் சிறப்பு
குறள் 73: 
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு. 
ஹிஷாலீ சென்ரியு  
அன்பின் பயன் 
மனிதனை மனிதன் 
மதித்து வாழ்தல் 
குறள் 74: 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 
ஹிஷாலீ சென்ரியு
ஈனும்  பிறவிக்கு   
ஈடான ஒன்று 
நட்புடன் கூடிய அன்பே  
குறள் 75: 
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 
ஹிஷாலீ சென்ரியு
ஆன்மாவின் 
நற்பயன் 
அன்பு கலந்த இல்வாழ்க்கை 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145