அன்பே உன் உயிர் என்னிடம் உள்ளது அதை எமன் நினைத்தாலும் முடியாது எவன் நினைத்தாலும் முடியது என புது இலக்கணம் வகுத்து விட்டேன் நம் காதல் அகராதியில் ...! |
அன்பே உன் உயிர் என்னிடம் உள்ளது அதை எமன் நினைத்தாலும் முடியாது எவன் நினைத்தாலும் முடியது என புது இலக்கணம் வகுத்து விட்டேன் நம் காதல் அகராதியில் ...! |
நீ என்னை மறந்து வாழ்கிறாய் நான் நீயே என் மருந்தாக வாழ்கிறேன் ...! |
நான் நாளும் பொழுதும் தேய்கிறேன் நிலவாக நீ காணும் பொழுதெல்லாம் சுட்டெரிக்கிறாய் கதிரவனாக ..! |
நீ என் காத்திருப்பின் கட்டளை நான் உன் காதலின் கல்லறை ...! |
நான் உன்னிடம் உருப்படும் படி பேசுகிறேன் ... நீ என்னிடம் உருப்படியாக பேசியதில்லை .. பின் எப்படி உயிர் பெரும் நம் காதல் ...! |
நீ விட்டு விட்டு கோக்கிறாய் நான் தொட்டுத் தொட்டு பார்க்கிறேன் நம்மை தொட்டு விட்டுப் போகிறது சில மணித்துளிகள் ...! |
நான் ஓடாய் தேய்கிறேன் என்றும் உன் நினைவில் நீ காடாக பூக்கிறாய் என்றென்றும் பலர் மனதில் ...! |
உன் வாழ்க்கை நூலகத்தில் வழுக்கி விழுந்த புத்தகம் நான் புரட்டிப் புரட்டி படிக்கிறேன் அத்தனை "PEN "குறிப்புகள் அதில் அட்டை படம் மட்டும் நீயும் நானும் ...! |
என் காதல் உனக்கு வெகுமதி தருவது போல் உன் காதல் எனக்கு நிம்மதியை தரவில்லை ஏன்..? |
ஒரு நொடியில் மலரும் பூவில் தான் பல ஆண்டுகள் பயன் தரும் தேன் சுவை உள்ளது அது போலவே உண்மை காதல் ஒரு நொடியில் மலர்ந்தாலும் அதன் சுவை ஆயுள் முழுவதும் மாறாது .! |
யாரை நீ உயிராக எண்ணுகிறாயோ அவர்கள் தான் உன்னை மயிராக தூசி
வீசுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பழகினால் போதும் அவமானமும் கண்ணீரும்
மிச்சப்படும் ...!
|
நான் அன்னப் பறவையாக மாறி உன் பசி தீர்க்க விரும்புகிறேன் நீ பல வண்ண பறவைகளுடன் கொஞ்சி தீர்க்கிறாய் உன் வாலிப பசியை ..! |
பிடிக்காத ஒருவரிடம் பிணமாக வாழ்வதை விட பிடித்த மனதோடு மணமாக வாழ்வதே காதலின் பேரின்பம் ...! |
நீ என்னைக் காலையின் பூனையாகப் பார்க்கிறாய் நான் உன்னைக் காதலின் கழுதையாகப் பார்க்கிறேன் நமக்குத் தெரியும் அவை நான்கு கால் விலங்குகள் என்று ஆனால் அவற்றிற்கு அபசகுனம், நல்ல சகுனம் என இரண்டு கால்கள் பொருத்தி நடக்க விடுகிறோம் ...! |
என் சிறு மூளை பெரு மூளை எல்லாம் துச்சமாக எண்ணுகிறேன் நீ என் காதல் மூளை ஆட்கொண்ட பின் ...! |
இருவரின் சண்டைக்குப் பின் இதழ் முத்தம் கேட்டு நொச்சரிப்பாள் என் அன்பின் ஆழத்தைப் பதம் பார்க்கவே நான் தரத் தொடங்கியதும் என் முத்தத்தின் சத்தத்தையும் நேரத்தின் மொத்தத்தையும் கணக்கிட்டுப் பார்த்து உள் வாங்கிக்கொள்ளும் காரண காரி ...! |
விடிந்ததும் நகரும் கதிரவனைப் போல் சுறுசுறுப்பாக இருந்தால் தான் அடைந்ததும் மலரும் நிலவை தாலாட்ட முடியும் ...! |
வித்தியாசமான இரவும் இல்லை விசித்திரமான பகலும் இல்லை சரித்திரமாக இருக்கிறது உன் மீதான பொருத்தமில்லாத அன்பு ! |
வெற்று காகிதத்தில் கூட கையெழுத்திட்டது இல்லை நான் ... வெற்று வேட்டு உன்னை கை பிடிக்கக் கையெப்பம் இட்டேன் எப்படி ... துட்டு இல்லாத வெற்று காகிதத்தில் தான் கட்டுக்கடங்காத காதல் கரை புரண்டோடும் என உன் கரம் பற்றத் துடிக்கிறது என் கண்கள் ..! |
எதை விரும்பி விரும்பிப் போகிறோமோ அதுவே விரோதமாக மாறும் போது விரும்புவது அனைத்தும் விஷமாகத் தோன்றும் ...! |
சதா காலமும் உன்னை நினைப்பதை விட சர்வ காலமும் உன்னையே சரணடைவது தான் என் சாகா வரமாக இருக்க வேண்டும் அன்பே தருவாயா ?? |
உறவுன்னு சொல்லிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் உயிருண்ணு சொல்லிக்க உன் ஒருவன் இருந்தால் போதுமென்ற உணர்வை மதிக்கத் தெரியாத உறவில் இருப்பதை விட மரணித்து விடுவதே மேல் ...! |
கனமான ஒன்றை இழந்து தவிக்கும் இதயம் தான் உன்னையும் உன் காதலையும் லேசாக தூக்கி வீசிவிட முடியும் ..! |
பாசமோ நேசமோ இருவரிடம் இருந்து வந்தால் அது உறவு இல்லை என்றால் அது ஒரு ஆத்மார்த்தமான பிரிவு ...! |
எனக்கான சிறகு என்னிடம் உள்ளது என்பதை உணர்த்தியது உனக்கான காதலை நோக்கி நீ பறந்த போது ..! |
எனக்கான காதல் உன்னிடம் சிக்கி சின்னா பின்னமாக துடிக்கும் போது கவலைக்கிடமானது என் இதயம் ...! |
காற்றை
விடவும் உயர்ந்த ஸ்தானம் உன் இதயத் துடிப்பு என்றவுடன் இதயத்தை அடைத்துவிட்டு காற்றைத் திறந்து விட்டாள் இப்போது பேயாகத் திரிகிறேன் காற்றில் ...! |
உன்
நினைவுகளை வரிசைப் படுத்திப் பார்க்கும் போதெல்லாம் இடையிடையே வந்தது நீ துண்டுதரிச்சிப் பேசிய ரணங்கள் ...! |
என் கவிதைக்குக்
கண் இருந்தால் கடலாய் இருக்கும் கால் இருந்தால் நிலவாய் இருக்கும் வாய் இருந்தால் புலம்பி இருக்கும் மூக்கு இருந்தால் சுவாசித்து இருக்கும் ஆனால் இதயம் மட்டும் இல்லாது இருந்திருந்தால் என்றோ நெருப்பு குழம்பு வானத்தை நோக்கிச் செல்வது போல் உன்னுடன் வாழாது மடிந்திருக்கும் ..! |
வாழ்க்கை போன திசையில் சென்றால் வலி தான் மிஞ்சும் வழுக்கி விழுந்த திசையை நோக்கிச் செல்லுங்கள் புது வழி பிறக்கும் ...! |
அடி பெண்ணே உன் ரௌத்திரத்தின் பின்னால் ராகு கேது எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டுமோ ? |
கர்வத்துடன் கடவுளின் காலடியில் விழுந்த பூக்கள் பக்தனின் கருணைப் பட்டு பிரசாதமாய் எழுந்து நிற்கிறது மோட்சம் கேட்டு ...! |
என் கவலையை விலை கொடுத்து வாங்கும் உரிமை உன் தனிமைக்கு மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி இனிமையாக்கியது ஓர் கவிதை ...! |
பேசாமல் அழுகிறேன் பேசி பேசி கொல்கிறது பேசும் ஒலிபெருக்கி ..! |
பல பல கனவுகளோடு உன்னையே சுற்றி வருகிறேன் சில பல வலிகளோடு என்னை திருப்பி அனுப்புகிறாய் என்ன செய்வது கரை தொட்டு செல்லும் அலையை போல நுரை கொட்ட உள்வாங்கி திரும்புகிறது ஆசையலை ...! |
என் அழைப்பு மணி உனக்கு எரிச்சல் ஊட்டும் என்றால் நம் காதல் வேடந்தாங்கல் இருந்து வேறு நாட்டிற்குப் பறந்துவிட்டது என அறிந்து கொள்ளவா...? |
இரு மனதாய் காதலிப்பவர்கள் தான் ஒரு மனதாய் பிரிகிறார்கள் ...! |
உன் விழித்திரையில் எனை ஒளித்து வைத்துக் கொள் நீ பாதை மாறும் போதெல்லாம் நான் உன் பார்வையாக இருந்து வழிநடத்துவேன் ...! |
மூன்று முறை உணவும் நான்கு முறை நீரும் பருகும் மிருகம் கூட தன் அன்பை புனிதமாக யாசிக்கிறது ஆறறிவு படைத்த உன் அன்பு மட்டும் தெரு நாயைப் போல உலவுகிறது ஏன் ...? |
அன்பே உன்னிடம் அடிக்கடி கேட்பது ஒன்றே ஒன்று தான் முத்தம் அதை மொத்தமாகக் கொடுத்துவிட்டால் மத்த நேரமெல்லாம் என்ன செய்வேன் ஆகையால் சத்தமில்லாமல் நித்தமும் கொடுத்துவிடு தித்திக்கும் அம்முத்தத்தை நான் திகட்டாமல் பருகிக்கொள்கிறேன் ...! |
தலைக்கு மேல் பாரமாக இருக்கும் "கடவுளை" நிகரான விலை கொடுத்து வாங்கினால் என் பரமாவது குறையும் ...! |
என் ஆவி அடங்குவதற்குள் ஒருமுறையேனும் உன் மடியில் தலைசாய்த்து ஒரு பிடியில் தாலாட்டும் அந்தி நிலவை ரசிக்க வேண்டும் ..! |
நீருடன் மோதி சேற்றுடன் முடிவடைகிறது மழையின் தாகம் ...! |
உன் குரல் கேட்க வேண்டும் என்ற ஏமாற்றமே என்னை கொஞ்சம் கொஞ்சமாக்க கூட்டியது உயிரின் ஆசையை இன்று அயிலோடு காத்திருக்கிறேன் ஆனால் காதல் சேரவில்லை ...! |
ஒரு தேநீர் குவளைக்குள் எத்தனை சாதி ஒளிந்திருக்கிறது என்று யாராலும் கூறமுடியுமா ? அது போலத் தான் வாழ்க்கை வறட்டு பிடிவாதத்திற்கும் வக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும் சாதி வெறியைத் தணிக்க தமிழனால் மட்டுமே முடியும் என்பதை ஒவ்வொரு மனிதனும் மறந்துவிடாதே ! |
வல்லினம் மெல்லினம் இடையினம் சேர்ந்தது தான் தமிழினம் என்ற மரபு போய் ஜாதியினம் என்ற பிரிவு வந்தது ஏன் ? |
உன் நினைவாக நான் சுமக்கும் உணர்வின் வலி யாதெனில் பால் மனம் மாறாத மழலையின் சிணுங்கல் ...! |
பழிச் சொல்லும் இடத்திலிருந்தால் அவர் வாழ்க்கை குழிதோண்டிப் புதைக்கப்படும் அதுவே சற்று விலகி இருந்து பார் அப்பழிக்கு ஈடாக அங்கே வேறு ஒருவர் முளைக்கும் போது அவ்விடத்தில் உன் பழி புதையலாகத் தோன்றும் ...! |
|
எனக்கு தெரிந்தே இங்கு இத்தனை பெண்களை கடந்திருக்கிறாய் என்றால் எனக்குத் தெரியாமல் எத்தனை பெண்களை கடத்தியிருப்பாய் என்ற சந்தேகமே என்ன அணுவணுவாக கொல்லுகிறது ...! |
ஒரு பெண்ணை மணந்த பின்பு அவளிடமே இன்னொரு பெண்ணை மணப்பேன் என்பது உன் வளர்ப்பின் திமிரு அதோடு கிடைக்கும் பெண்ணை எல்லாம் சுவைப்பேன் என்பது ஆண்ணாதிக்க திமிரு ...! |
வெயிலில் அலைந்தேன் வேர்க்கவில்லை மழையில் நடந்தேன் நனையவில்லை நீ அருகில் வந்ததும் நனைந்தது போல் வேர்க்கிறது எப்படி ...! |
|
|
மரமாக நினைத்தால் கனி தருவேன் | |
மழையாக நினைத்தால் நீர் தருவேன் | |
நிலவாக நினைத்தால் நல்லுறக்கம் தருவேன் அதை விடுத்து வெட்டி வீழ்த்தினால் புயலாவேன் கட்டிப் போட்டால் வெள்ளமாவேன் கிட்ட வந்தால் சுட்டெரித்துவிடுவேன் கொஞ்சம் தள்ளியே நில் தலைவணங்குகிறேன் இப்படிக்கு இயற்கை |
பெண் பைத்தியமும் pen பைத்தியமும் ஆண்" "மை" உள்ளவரை அடங்காது ..! |