ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி
ஒளிந்திருக்கிறது என்று
யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை
வறட்டு பிடிவாதத்திற்கும்
வக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும்
சாதி வெறியைத் தணிக்கத்
தமிழனால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும் மறந்துவிடாதே !
மறுமலர்ச்சி செய் மதம் இனம் மொழி கடந்த
அகிம்சை வழி நடந்து அன்பை விதை
நாடும் போற்றும் நலமும் செழிக்கும் !
வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் !