வலை நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இறந்த காலம் எதிர்காலம் 
கூட்டுப்பலன் 
புத்தாண்டு ...!


பூமி மங்கை ...!

காமம் பசியாகும் போது 
பழி வாங்குகிறது
பஞ்ச பூதங்கள் !
காமம் 
பக்தியாகும் போது 
பரவசமாகிறாள் பூமி மங்கை ...!

பருவங்கள் ...!

உலகத் தொகையும் 
உலர்ந்த சருகும் 
ஒன்று தான் !

என் பருவங்கள் 
மீண்டும் தளிர்த்து சருகாகும் 

உன் பருவங்கள் 
மீண்டும் தழைத்து வம்சமாகும் ...!

சிறந்த கண்கள் ....!

பழைமையை பழியாக்கும் 

புதுமையைவிட 

பாராம்பரியத்தை 

பாழக்கா நவீனமே 

சிறந்த கண்கள் ஆகும் ...!

கடலலை அலைகள் ...!

எத்தனையோ விதவைகளின் 

கண்ணீர் துளிகளில் தான் 

சுதந்திரம் பெற்றோம் 

என்று உணர்த்துகிறது 

டல லை அலைகள் ...!

அம்மாவாக அவள் ...!


அறாத ரணம் 

அவளின் நினைவுகள் 

ஆறடி சென்றபின்னும் 

அடங்கவில்லை 

ஆவியாக நான் 

அம்மாவாக அவள் ...!

சுவர் இருந்தால் தான்...!

இறக்கமற்ற மனதை 

இறங்கி இறங்கி காதலித்தேன் 

சுருக்கமாக சொல்லிவிட்டாள் 

சுவர் இருந்தால் தான் 

சித்திரம் வரையமுடியும் என்று ...!

ஹிஷாலியின் ஹைக்கூ





பாலைவனத்தை விட 

கொடுமையானது 

சோலைவனம் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

மதசத்தியை 

மிஞ்சியது 

மனசக்தி ...!

சாதிக்க முடியவில்லை ...!

எந்த சாதி கொண்டும் 

சாதிக்க முடியவில்லை 

மூன்று பேத

மூடநம்பிக்கையற்ற 

உலகை ...!

பதியம் போட...!

செலவுகளை குறித்து 
வைப்பது போல் உன்னுடன்
செலவாடத்துடிக்கும் கனவுகளை 
குறித்து வைக்கிறேன் 
கவிதையில் !
என்றோ ஓர் நாள் 
பார்த்து படிப்பதற்காக அல்ல 
பதியம் போட...!

புதிய போர்களம் ...!

தினமும் சுத்தம் செய்கிறேன் 
என் இதயத்தை 
அதில் ...
அழுக்கான உன் நினைவுகள் மட்டும் 
புதிய போர்களமாய் 
புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது ...!

நானும் கடவுள் தான் ...!

தினமும் 
உயிர்த்தெழுகிறேன் 
காதல் சிலுவையை சுமப்பதினால்  
நானும் கடவுள் தான் ...!

நம் சுவாசக் காற்றில் ...!

உன் சுவாசத்தைக் கண்டு 
என் சுவாசத்தை 
உள் வாங்கினேன் 

நம் சுவாசக் காற்றில் 
உயிர் வாழும் காலத்தை 
நினைக்க ...!

நூறு கண்ட மும்பை திராவிடன் !

கடவுளின் முதலவன் 
கலைப்பையின் தலைவன் 
திராவிடன் !

திருக்குறள் உலகத்தில் 
திரவியம் தேடியவன்  
திராவிடன் !

ஆதம் ஏவாள் 
முதல் கருவறையில் வந்தவன் 
திராவிடன் !

நாட்டை ஆளும் 
இயற்கை கற்பூரம் 
திராவிடன் !

கோட்டைக்கு ஓட்டுக்கேட்கும் 
அமிர்த மந்திரம் 
திராவிடன் !

காற்றுக்கே 
கல்வி சலுகை ஈட்டுபவன் 
திராவிடன் !

முன் வந்து பின் தாங்கும் 
ஓய்வூதியமானவன் 
திராவிடன் !

வெற்றி தோல்விகளை 
எடுத்துறைக்கும் அகாரதி 
திராவிடன் !

பறைக்கு குருவானவன் 
திரைக்கு உயிரானவன் 
திராவிடன் !

சித்த மருத்துவத்தில் 
செத்துப் படைத்தவன் 
திராவிடன் !

முதல் சூரியன் 
பிறை நிலவில் விழித்த முகம் 
திராவிடன் !

அனாவில் அளந்து 
தினாவில் உயர்ந்து 
வரலாற்றுகு வழி காட்டுபவன்
திராவிடன் ..!

அனைத்திந்திய நாட்டில் 
ஆதி இன்றி  ஓர் அணுவும் 
அசையாது என்று வாழ்பவனே 
திராவின்  ....!

எங்கும் திராவிடன்
எதிலும் திராவிடன்
சங்கம் முழங்கும்
சாகித்ய தமிழனே நீ

முன்னூறு கண்ட
மும்பையில்
முழுமதியாய் சிறக்க
வாழ்த்துகிறோம் !


(குறிப்பு இது போட்டிக்காக எழுதியது தவறாக எண்ணவேண்டாம் குறையிருந்தால் மன்னிக்கவும் )


என்றும் உன் நினைவுகளுடன் !

உண்மை காதல் உலகை ஆளும் 
ஊமை காதல் உணர்வை கொள்ளும் 
அதையும் தாண்டி 
கடிகராமாய் துடிக்கிறேன் 
கடலலையாய் தவிக்கிறேன் 
காற்றாய் வசிக்கிறேன் 
கதிரவனாய் துதிக்கிறேன் 
கடவுளே தடுத்தாலும் 
கடுகாய் மரித்தாலும் 
விடை அறியா உலகில் 
விடுகதையாய் வாழ்ந்திருப்பேன் 
என்றும் உன் நினைவுகளுடன் !

முதல் மரியாதை - 1 to 4




@ 1. ஆதாம் ஏவாள் 
கை தட்டலில் 
உயிர் கொடுத்தது 
ஆப்பிள் ...!

@ 2. அந்த ஏழு நாட்களுக்கு 
அழகூட்டி பிறந்தது 
அன்னைக்கு முதல் 
ஆயுத எழுது ...!

@ 3. மரணத்தை வென்று 
மண்ணில் பிறந்த நான் 
அழுகிறேன் ஏன் தெரியுமா ?
மீண்டும் மரணத்தை 
ஒத்திவைக்க ..!

@4. எருமைக்கும் 
வறுமை வந்தது 
குளத்தில் தண்ணீர் 
வற்றியதால் அல்ல 
நீர் சந்துக்களின் 
முத்தம் வற்றியதால் !


பாசத்தைவிட பழியே ...!


உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!

காதல் போதை...!

நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் 
விடிகிறது வெளிச்சமில்லை 
முடிகிறது உறக்கமில்லை 
நடைப் பிணம் போல் 
நடமாடுகிறேன் ....
நீயில் நானாக 
நினைவில் தீயாக

அதை ...
கண்ணின் நீர் கொண்டு 
காயத்தை துடைக்கிறேன் 
வடுக்கள் மறைந்தாலும் உன் 
வாசம்  மாறாத 
வெண்மேக மோகத்தில் 
பெண் சோகமாய் வாழ்கிறேன் 
காதல் போதையில் 

வேண்டுதல் !

(இளவரசன் இறந்த இடத்தில் 
இருந்த அம்மா ) or
தாழ்த்தப்பட்டோர் 
இதயங்கள் 
இறைவனிடம் இப்படி 
பிரார்த்தனை செய்கீறார்கள் 
"ஆண்டவனே 
இந்தத் தலைமுறை மாதிரி 
எந்தத் தலைமுறையும் 
இருந்துவிடக்கூடாது "!

ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!

அன்று 
நீயும் நானும் 
ஆபாசமில்லா 
அழகிய தமிழில் 
அலைபேசியில் உரையாடிய நாள் 
ஆஸ்கார் விருதைவிட 
ஆனந்தமானது ...!

ஒளி காட்டும் வழி !

பேசா தீபம்
பேசும் தீபத்தை
அணைப்பதல்ல தீபாவளி
பசிக்கும் கோயிலில்
பணத்திரியை
தூண்டுவதே தீபாவளி !
கல்லறையை சுருக்கி
கண்ணீரால் களிப்பதல்ல
தீபாவளி
கண்கள் சிரிக்க
காளையர் புசிக்க வருவதே
தீபாவளி
மழையில்லா இடி
மனமில்லா மின்னல்
மலர்வதல்ல தீபாவளி
மண்ணை பொன்னாக்கி
மனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி
ஓராயிரம் சுவாசங்கள்
ஒசோனை ஓட்டையாக்கி
ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்று
நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி
போட்டி பொறாமையுடன்
பண்பாட்டை  பாழாக்குவதல்ல
தீபாவளி
புத்தாடை போனஸ் பலகாரத்துடன்
புண்ணிய ஆத்மாக்களை
வணங்குவதே தீபாவளி
எண்ணெய் குளியலில்
எண்ணிலடங்கா பாவங்களை
கழுவுவதல்ல தீபாவளி
எதிரியை நண்பனாக்கி
எச்சிலையை தேடும் பசிக்கு
எட்டா புகழை தேட
வழி
காட்டுவதே தீபாவளி

மதுவை குடித்து
மாவட்டம் மாவட்டமெல்லாம்
வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி
மரண வயது நூறாக்கி
மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து காட்டுவதே
சிறந்த தீபாவளி

ஹிஷாலியின் ஹைக்கூ - வாலி

வலி கொடுத்து
வழி தந்தார்
வாலி ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

வருந்தும் மனம் 
வருந்தவில்லை 
பணம் ...!

ஒற்றை முகம்

எத்தனையோ முகங்கள்
என்னை கடந்து சென்றாலும்
உன் ஒற்றை முகம் தான்
என்னோடு ஒட்டி உறவாடத்துடிக்கிறது

அருவி இதழ் எண் - 18


கலையும் மேகம் 
கலங்கவில்லை 
வானம் 

தொலைக்காட்சி தொடர்களுக்கு 
ஓய்வு அளித்தது 
தொடர் மின்வெட்டு 

தோற்றுப் போகிறேன் 
இறுதி அலை 
எதுவென்று தெரியாமல் 

காதல் புற்று நோய் ...!

காதல் புற்று நோய்
காமம் தொற்று நோய்
கர்மம் பற்று நோய்

என் கவிதைக்கு மட்டும் ...!




காதல் வந்ததும் 

நானும் உலக 

அழகிதான் 

என் கவிதைக்கு மட்டும் ...!

எல்கேஜி முதல் எலும்புக்கூடு வரை ...!

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!


எல்கேஜி சாதி 
எலும்புக்கூடு வரை 
எரிகிறது ....
பின் எதற்கு 
வேஷம் !
அன்று 
இனம் கொள்ள 
சாதியைப் படைத்தான் 
இன்று 
இதயம் கொள்ள 
சாதியை வெறுத்தான் 
கோசம் போடும்
மொழியும் வழியும் 
பழியாகும் தேசத்தில் 
உதிக்கும் சூரியனும் 
உயர்ந்தவனில்லை 
உலவும் நிலவும் 
கூட தாழ்ந்ததில்லை - ஏன் 
அழியும்  
உயிர்களுக்கு மட்டும் 
இந்த ஆதங்கம் 
அத்தனையும் 
ஓர் நாள் 
அடங்கிவிடும் பணப் பாதங்கம் 
அய்யோ என்றாலும் 
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள் 
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின் ஓரின்பம் ...!

விஞ்ஞான உலகம் ...!

சாதியால் 
சலனங்கள்  முத்தெடுக்கிறது 
சடலங்கள் 
தத்தெடுத்தக் காதலுக்கு 
மரணப் பித்தாக 
வேட்டையாடிக் கொண்டிருக்கிறது 
விஞ்ஞான உலகத்தில் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ - காந்தி



கர்மம் தர்மம் 
கலந்த சிலுவை 
காந்தி ...!

அறிந்தும் அறியாமல் ...!





இருந்தும் அறியாத 
இதயத்தில் 

வருந்தும் மருந்தாய் 
வாழ்கிறேன் 

அறிந்தும் அறியாமல் 
வந்தக் காதலால் ...!



அருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு

இயற்கையும் இயற்கை சார்ந்ததுமான '

அருவி ஐக்கூ  சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு 

முனைவர் .க .இந்திரசித்து 

சமூக நோக்கு :

பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகு மனிதன், சமூகம் என்ற நிறுவனத்துக்குள் வந்து சேர்ந்துள்ளான் .மனிதன் ஒரு சமுதாய விலங்கு ( Social Animal ) என்று கூறுவர் .

அனால் உற்பத்து உறவுகளும் உற்பத்திக் கருவிகளும் மனித சமுதாயத்திற்குள் பல்வேறு வகையான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன .சாதிச் சிக்கல் ,சமயச் சிக்கல்களில் மனிதன் சிக்கித் தவிக்கின்றான் .இச்சிக்கல்களைப் போக்குவதற்கான முன்னனிப் படைவீரர்களாய் முன்னே நிற்பவர்கள் படைப்பாளிகளே . நூற்றுக்கணக்கான குழந்தைகள் சத்துணவின்றியும் பாலின்றியும் இறந்து போய் விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன . ஆனால் மனிதர்கள் உணவுப் பொருளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தின் காரணமாக பெண் குழந்தைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை ,

'கல்லுக்கு பாலாபிஷேகம் 
பெண் சிசுவிற்கு 
கள்ளிப்பால் '

என்ற கவிதையில் இசாலி (ஹிஷாலீ) எடுத்துரைக்கின்றார் (ப.26).

சமயத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையின் விளைவால் ,வெறும் கற்களுக்கு பால் முழுக்கு நடைபெறுவதையும் , பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பதையும் இன்றைய நடைமுறை வாழ்வில் காணலாம் .ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே பெண் குழந்தைகளுக்கு 'கள்ளிப்பால் 'கொடுக்கும் வழக்கம் நிலவுவதைக் காணலாம் . இக்கவிதையில் பெண்ணியப்பார்வை மிகவும் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது . நாணற்காடனின் 'செருப்பு தைப்பவனின் உறக்கம் ' (ப.73) என்னும் சொற்களில் வெளிப்படும் கருத்தாடல் தலித்தியத்தின் தேவையை வலியுறுத்துகிறது . பொருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் அன்றாடம் நாம் காணும் செருப்பு தைப்பவர்களின் அவலக்காட்சியை சமூக விடுதலைச் சிந்தனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.இந்தச் சமூகம் பல்வேறு வகையான சமூக அநீதிகளைக் கொண்டுள்ளது . எனவே 'சமூகநீதி ' தேவை என்னும் கருத்தோட்டத்தை இக்கவிதை வெகு நுட்பமான கவிதை மொழியில் எடுத்துரைக்கின்றது (ப.73). சமுதாய விடுதலைக்கும் தலித் விடுதலைக்கும் இத்தகைய கவிதைகள் அரண் சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம் . இன்றைய சமுதாயத்தில் 'பசி ' என்பது மாபெரும் வாழ்க்கைச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலகோடி மனிதர்கள் பசியால் வாடித் துன்புற்று வருகின்றனர் . அதே வேளையில் சிலநூறு பேர் வசதியில் வாழ்ந்து செழிப்பதையும் பார்க்கலாம் . இந்த இருவேறு வார்க்கங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தைத் தான் காரல் மார்க்சு 'வர்க்கப்போர் ' என்று குறிப்பிட்டார் .

மனிதர்கள் , பசித்த மனிதற்குக்கு உணவு தர மறுக்கிறார்கள். ஆனால் பசித்த சிறுவனுக்கு மரங்கள் பலன்களை உதிர்த்துத் தருகின்றன (ப.17) என்று ச.முருகேசு கூறுவதன் வாயிலாக மனிதர்களுக்கு இல்லாத மனிதநேயம் மரங்களுக்கிருப்பதை உணர்த்துகிறார். அதே வேளையில் காற்று கிளைகளை உலுக்குவதையும் , அதிலிருந்து விழும் பழங்களை பசித்து சிறுவன் கையேந்திப் போருவதையும் அழகான படிமக்காட்சி ஓவியமாகக் கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார் .95 கவிஞர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்திருப்பது போல் தோன்றுகிறது. அனைவருமே 'இயற்கையும் இயற்கை சார்ந்த ' செய்திகளையும் கவித்துவம் வழிய வழிய கவிதையாக்கியுள்ளானர். வானம் பாடிக் கவிஞர்களுக்கு    'மார்க்சியம் ' பின்புலமாக இருந்ததைப் போல் , இவர்களுக்கு இயற்கை பின்புலமாக இருந்துள்ளது. இயற்கையை தனித்து பாடுவதிலும் சரி இயற்கையை சமூகப் பின்புலத்தோடு படைப்பதிலும் சரி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.  முயன்று ,தொகுத்து ,அழகான அருவி இதழாக வெளிக்கொண்டு வந்துள்ள காவனூர் ந .சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .ஐக்கூ இலக்கிய வரலாற்றில் இனிமேல் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்கு முன் என்றும் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்குப் பின் என்றும் பேசும் காலம் வரும் . வானம் பாடிக் காலம் என்றும் இரண்டாகப் பிரித்துக் கூறுவது வழக்கம் . இன்றைய காலத்தை 'அருவிக்காலம் ' என் அழைக்கலாம் என்பதற்குரிய அனைத்து அடையாளங்களும் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.


அருவி இதழுக்கும் முனைவர் .க .இந்திரசித்து அவர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் !




இசை படித்தாள் ...!




இசைக்கு அன்னை 
இறைவனா இதையமா 
என்றாள் ...

இரண்டையும் 
சேர்த்துப் படைத்த 
நம் அம்மா என்றேன் 

இதழ் விரித்து 
இசை முடித்தாள் - என்றும்
பல்லவியும் சரணமுமாய்
சங்கமிப்போம் 
நம் கணங்களில்  ...!



வெக்கத்தில் தலை குனிந்தாள் ...!




எதிரியாய் கலமிரங்குகிறேன் 
உன் முதல் 
எழுத்தை ஆக்கிரமிப்பு செய்ய 

தவணைத் தொகையாக 
என்ன தருவாய் என்றேன் !

தலைவனாய் வருகிறேன் 
பின் எதற்கு தவணை என்றதும் 

வெக்கத்தில் தலை குனிந்தாள்
சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...!






அருவி இதழ் எண் - 17



 துரத்தும் கொடுமைகள் 
ஓய்வெடுக்கிறது 
    கவிதையின் நிழலில் ...!



    னைவரும் 
    பிரம்மாக்கள் 
   வாழ்க்கை நாடகம் ...!



ஹைக்கூ - காதலின் பரிசு


காதலின் பரிசு 

தோல்வி ஜென்மம் 

வெற்றி ஜெனனம் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ - அருவி ...!



இயற்கைக்கு 

பல் துலக்கியது 

அருவி ...!

என்றென்றும் புன்னகை...!



அதிசயத்திற்கு உயிரூட்டும் 
அவள் கண்கள்

அன்பிற்கு பயிரூட்டும் 
அவள் வாசம் 

அத்தனைக்கும் ஆசைப்படு என்று  
விதையாகி வீழ்ந்தேன் 

வீதியை அலங்கரிக்கு  
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...!



எமதர்மன் ...!


விலை மதிப்பு இல்லா
 ஊரில்
விதி மதிப்பை தேடும் 
உளவாளி 
எமதர்மன் ...!











ஆயிர முத்தம் ...!



ஆயிரம் முறை யோசித்து 

அரை முத்தம் தந்தேன் 

என் அருகில் 

யாரும் இல்லாததால் 

இருந்தால் ....

ஆயிரம் முத்தம் தந்திருப்பேன் 

இதய சத்தத்தில் ...!


சரித்திரம் ...!



சாரிரம் படிக்கச் சென்றேன் 

சரித்திரம் படித்துவிட்டேன் 

இசையில் அல்ல 

அவள் இதயத்தில் ...!



காதல் ஜீன்கள் ...!



தொற்று வியாதி பற்றி 

கேள்விப் பட்டிருக்கிறேன் 

நீ

தொற்றிக்கொள்ள மட்டும் 

ஏன் தடை விதிக்கிறது 

காதல் ஜீன்கள் ...!



வரமா ? சாபமா?


நீ 

எனக்கு கிடைத்தால்

அது 

முன் ஜென்ம சாபம் ...!

நான் 

உனக்கு கிடைக்காவிட்டால்

அதுவே 

பின் ஜென்ம வரம் ...!




நாளைய சரித்திரம் - ஹைக்கூ,



நாளைய சரித்திரம் 

பேனாவை மிஞ்சியது 

கணினி ...!



மணிவண்ணன் ...! (15.06.13)



மணி சுற்றுகிறது மலர் வளையம் பற்ற 
வண்ணம் மறைந்தது ஏனோ ?அவர் 
எண்ணமெல்லாம் திரை இறைவா 
என்னது இது உன் குறைவா?

தந்தை இழந்த மகனுக்கு 
தன் கை உதிவி செய்தாயோ ?
மங்கையர் தாயின் குங்குமத்தை 
மரணத்தில் விதைத்தாயோ ?

சங்கமிக்கும் திரைக்கடலில் 
சரித்திரம் படைத்த கலங்கரை 
அங்கம் மட்டும் ஆடுகிறது மனையில் 
அடுத்த பாதரசம் இல்லாமல்
நகைச்சுவையே ...

ஒரு திரி எரியப் பல விழி கரையத்  
தேராய் போகும் கலையே உனக்காக 
உலகமே வழியனுப்பிவைத்தது  
நலலொரு திரைப் பிரம்மனை 
இழந்துவிட்டோமோ என்று !

(இவரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் )

காதல் காதலாகும் ...!



யார் 
யாரை வேண்டுமானாலும் 
காதலிக்கலாம் 
ஆனால் 
காதல் 
யாரைக் காதலிக்கிறது என்று 
காத்திருந்து காதல் செய் 
காதல் காதலாகும் ...!



சென்ரியு - செல் அடங்கிவிடும்



"செல்" அடிச்ச பேசாதே 

"செல்" அடங்கிவிடும் 

சேருமிடம் தெரியாமல்  ...!

mhishavideo - 145