விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் |
விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே |
படைத்தவன் துணையில் எனை வளர்க்க |
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே |
உடுத்தும் ஆடை அழகினிலே உன் |
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் |
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் |
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே |
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் |
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் |
உலகத்தில் நானும் வலம் வரவே உன் |
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே |
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் |
எல்லையில்லா தியாகத்தை என்ற |
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன் |
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா |
பாலும் தேனும் கலந்தூட்டி என் |
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள |
பாவி நானும் துடிக்கின்றேன் உன் |
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே ! |
உயிர்த்திசை
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete