உயிர்த்திசை

Related image

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் 
விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே 
படைத்தவன் துணையில் எனை வளர்க்க 
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே 
உடுத்தும் ஆடை அழகினிலே உன் 
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் 
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் 
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே 
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் 
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் 
உலகத்தில் நானும் வலம் வரவே உன் 
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே 
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் 
எல்லையில்லா தியாகத்தை என்ற  
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா 
பாலும் தேனும் கலந்தூட்டி என் 
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள 
பாவி நானும் துடிக்கின்றேன் உன் 
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே !

4 comments:

  1. Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145