![]() விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் |
| விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே |
| படைத்தவன் துணையில் எனை வளர்க்க |
| பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே |
| உடுத்தும் ஆடை அழகினிலே உன் |
| உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் |
| படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் |
| பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே |
| ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் |
| உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் |
| உலகத்தில் நானும் வலம் வரவே உன் |
| உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே |
| எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் |
| எல்லையில்லா தியாகத்தை என்ற |
| எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன் |
| ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா |
| பாலும் தேனும் கலந்தூட்டி என் |
| பாவக் கணக்கை முடித்துக்கொள்ள |
| பாவி நானும் துடிக்கின்றேன் உன் |
| பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே ! |
உயிர்த்திசை
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!

அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete