![]() கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
| உடைந்தது கன்னிக்குடம் |
| உடையாத நீர்க்குமிழி |
| குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
| பசிக்கு தாயின் மறு பிறவி ... |
| அழியா அட்சைய பாத்திரம் ! |
| தாலாட்டு பாடும் தாயின் |
| தியாகத்தில் பிறக்கும் |
| தந்தையின் முதலெழுத்து ... |
| அள்ள அள்ள குறையாத |
| அறிவு பெட்டகம் ! |
| புது குமிழி சூட்டில் |
| மழைத்துளியாய் சிரிக்கும் |
| மருமகள்... தலைமுறை |
| பொக்கிஷத்தின் தாய்மடி ! |
| பேரனோ பேத்தியோ வென |
| ஏங்கும் பெற்றோருக்கு |
| தாத்தா பாட்டியின் சொத்து ... |
| உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
| தியாகத்தின் முடிவுரை ! |
| தளர்ந்த தாய் தந்தைக்கு |
| வளர்ந்து ஆளாகும் |
| மகனின் கைப்பிடிப்பு |
| கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
| மண்ணில் மக்கும் உடலும் |
| சொக்கும் அழகும் என்றுமே |
| உடையும் நீர்குமிழியென |
| உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
உடையாத_நீர்க்குமிழி
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கைவிரல் ...!
காதலியின் |
| உருவம் வரைந்தேன் |
| உயிர் கொடுத்தது |
| கண்ணீர் துளிகள் |
| துடைக்க முயலுகிறேன் |
| இனித்தது கைவிரல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
குருவிக் கூடு ...!
![]() காற்று வந்து |
| குறி சொன்னதும் |
| அய்யோவென |
| உதிரும் கிளைக்கு |
| அடைக்கலம் கொடுத்தது |
| குருவிக் கூடு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பக்கத்து வீட்டு ரோஜா செடி !
![]() முறிந்த காதலியின் |
| முகத்தை நினைவு |
| கூறுகையில் |
| அதிர்வில்லா "அலைபேசியா " |
| வருகையில்லா "வாட்ஸப்பா " |
| டூவிட்ட "டுவிட்டரா " |
| முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
| சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
| என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
| வளர்ந்து விட்டது |
| பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
| முறிந்த காதலியின் |
| முகத்தை நினைவு |
| கூறுகையில் |
| அதிர்வில்லா "அலைபேசியா " |
| வருகையில்லா "வாட்ஸப்பா " |
| டூவிட்ட "டுவிட்டரா " |
| முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
| சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
| என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
| வளர்ந்து விட்டது |
| பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி சிறப்பிதழ் - 2016
| செடியின் வாசத்தை |
| கிள்ளி வந்தது |
| பறித்த மலரின் காம்பு ...! |
| வரப்பு இருந்த இடம் |
| பரபரப்பாக பேசப்படுகிறது |
| வீட்டு மனைகள் ...! |
| மண் குதிரை |
| ஏறி இறங்கியது |
| சிறுவர் மனசு ...! |
| தாண்டுவதற்குள் |
| நீண்டுகொண்டே செல்கிறது |
| வறுமை ...! |
| கோரைப்புல் |
| மினுமினுக்கிறது |
| பனித்துளி ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் அலை ...!
முதல் அலை |
| முத்தமிட்ட |
| ஈரம் காய்வதற்குள் |
| இழுத்து வருகிறது |
| இன்னொரு பேரலையை |
| அடக்கி முத்தமிடுவதற்குள் |
| அழித்துவிட்டது |
| எதோ ஒரு கால் தடம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விவசாயி மட்டும் ...!
![]() பணப் பட்டு வாடா |
| பால் பாக்கெட் போடும் முன்னே |
| பாங்க் வாசலில் கூட்டம் |
| அன்று |
| கருவில் இருக்கும் குழந்தைக்கு |
| சீட் வாங்க |
| வரிசையில் நின்றான் |
| இன்று |
| பிறந்த குழந்தைக்காக சேமித்த |
| பணத்தை மாற்ற |
| வரிசையில் நிற்கிறான் |
| அட மதிகெட்ட சமூகமே |
| ஓசிக்கும் வரிசை |
| காசுக்கும் வரிசை |
| ஆனால் |
| எந்த வாரிசுமே இல்லாமல் |
| விவசாயி மட்டும் |
| வரிசை வரிசையாக |
| உயிரை இழக்கிறான் |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணன் பாட்டு ...!
கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
| எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
| தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
| தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
| எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
| அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
| சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
| சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
| பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
| பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
| கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
| கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
| கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
| சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
| எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
| எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரிசாக கொடுக்க ....!
| நினைவையெல்லாம் |
| பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் |
| நம் பதிவு திருமணமன்று |
| பரிசாக கொடுக்க .... |
| பயனளிக்காமலே பயன் பெற்றது |
| பக்கத்து வீட்டு பெண்ணுடன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
| புகை மூட்டம் |
| நடுக்கத்துடன் |
| இளங்குஞ்சு ...! |
| வரப்பு இருந்த இடம் |
| பரபரப்பாக பேசப்படுகிறது |
| வீட்டு மனைகள் ...! |
| கசக்கி எறிந்த குப்பையில் |
| சிரிக்கிறது |
| அழகு ஓவியம்...! |
| அளவற்ற உலகம் |
| அளந்தே வைத்தான் |
| வயிற்றை ....! |
| காட்சி தரும் கடவுள் |
| ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
| கட்டண சலுகை ...! |
| செடியின் வாசத்தை |
| கிள்ளி வந்தது |
| பறித்த மலரின் காம்பு.' |
| கதவுகளற்ற வாசல் |
| மூடிச் செல்கிறது |
| மனஅழுத்தம்...! |
| சாலை வியாபாரிக்கு |
| வாசம் வீசுகிறது |
| காகித பூ ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்க குல தெய்வமே ...!
![]() குலசாமி திருவிழா இங்கே |
| கூடியிருப்போருக்கு ஓர் விழா |
| வானம் படியா போனவுங்களையும் |
| வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
| மண்ணும் பொண்ணாக |
| மக்கள் பஞ்சம் காணாது |
| நின்னு நிதானமாய் |
| நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
| வேட்டைக்கு போய் வரும் |
| வீரகுல கருப்பனே .. உனக்கு |
| உண்ணும் படையலிட்டு |
| உருமி மேளம் குலவையிட்டு |
| கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
| காத்து நிற்கும் கருப்பனே |
| நல்வாக்கு சொல்லுமையா |
| வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
| ஓலப்பாயில் சோறு குவிச்சு |
| எல்லைக் காத்த அய்யனாருக்கு |
| எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
| உண்ணா விரதமிருந்து |
| ஊருக்கே பந்தியிட்டு |
| ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
| கரகாட்டம் ஒயிலாட்டமென |
| கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
| காக்கும் மாடனே உனக்கு |
| காவு கொடுக்கும் சாமத்துல |
| குறி கேட்க வந்தோமையா எங்கள் |
| குறையெல்லாம் தீர்த்துவையும் |
| எங்க குல தெய்வமே ...! |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஞாபகம் ...!
| உனக்கும் எனக்கும் |
| நடந்த சூர சம்ஹாரத்தில் |
| காதல் என்ற வாழ்க்கை |
| மட்டும் தான் அழிந்தது |
| ஆனால்இன்னும் |
| உயிர் பெற்றுக்கு கொண்டே தான் |
| இருக்கிறது ஞாபகம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...




