கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
கண்ணன் பாட்டு ...!
Labels:
பக்திப் பாடல்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...