எங்க குல தெய்வமே ...!

Image result

குலசாமி திருவிழா இங்கே 
கூடியிருப்போருக்கு ஓர் விழா 
வானம் படியா போனவுங்களையும் 
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா 
மண்ணும் பொண்ணாக 
மக்கள் பஞ்சம் காணாது 
நின்னு நிதானமாய் 
நொருப்பு பந்தம் கைபுடிச்சி 
வேட்டைக்கு போய் வரும் 
வீரகுல கருப்பனே .. உனக்கு 
உண்ணும் படையலிட்டு 
உருமி மேளம் குலவையிட்டு 
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை 
காத்து நிற்கும் கருப்பனே 
நல்வாக்கு சொல்லுமையா  
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு   
ஓலப்பாயில் சோறு குவிச்சு 
எல்லைக் காத்த அய்யனாருக்கு 
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு 
உண்ணா விரதமிருந்து 
ஊருக்கே பந்தியிட்டு 
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து  
கரகாட்டம் ஒயிலாட்டமென 
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை 
காக்கும் மாடனே உனக்கு 
காவு கொடுக்கும் சாமத்துல 
குறி கேட்க வந்தோமையா எங்கள்   
குறையெல்லாம் தீர்த்துவையும் 
எங்க குல தெய்வமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145