![]() குலசாமி திருவிழா இங்கே |
கூடியிருப்போருக்கு ஓர் விழா |
வானம் படியா போனவுங்களையும் |
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
மண்ணும் பொண்ணாக |
மக்கள் பஞ்சம் காணாது |
நின்னு நிதானமாய் |
நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
வேட்டைக்கு போய் வரும் |
வீரகுல கருப்பனே .. உனக்கு |
உண்ணும் படையலிட்டு |
உருமி மேளம் குலவையிட்டு |
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
காத்து நிற்கும் கருப்பனே |
நல்வாக்கு சொல்லுமையா |
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
ஓலப்பாயில் சோறு குவிச்சு |
எல்லைக் காத்த அய்யனாருக்கு |
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
உண்ணா விரதமிருந்து |
ஊருக்கே பந்தியிட்டு |
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
கரகாட்டம் ஒயிலாட்டமென |
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
காக்கும் மாடனே உனக்கு |
காவு கொடுக்கும் சாமத்துல |
குறி கேட்க வந்தோமையா எங்கள் |
குறையெல்லாம் தீர்த்துவையும் |
எங்க குல தெய்வமே ...! |
எங்க குல தெய்வமே ...!
Labels:
பக்திப் பாடல்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...