![]() குலசாமி திருவிழா இங்கே |
| கூடியிருப்போருக்கு ஓர் விழா |
| வானம் படியா போனவுங்களையும் |
| வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
| மண்ணும் பொண்ணாக |
| மக்கள் பஞ்சம் காணாது |
| நின்னு நிதானமாய் |
| நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
| வேட்டைக்கு போய் வரும் |
| வீரகுல கருப்பனே .. உனக்கு |
| உண்ணும் படையலிட்டு |
| உருமி மேளம் குலவையிட்டு |
| கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
| காத்து நிற்கும் கருப்பனே |
| நல்வாக்கு சொல்லுமையா |
| வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
| ஓலப்பாயில் சோறு குவிச்சு |
| எல்லைக் காத்த அய்யனாருக்கு |
| எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
| உண்ணா விரதமிருந்து |
| ஊருக்கே பந்தியிட்டு |
| ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
| கரகாட்டம் ஒயிலாட்டமென |
| கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
| காக்கும் மாடனே உனக்கு |
| காவு கொடுக்கும் சாமத்துல |
| குறி கேட்க வந்தோமையா எங்கள் |
| குறையெல்லாம் தீர்த்துவையும் |
| எங்க குல தெய்வமே ...! |
எங்க குல தெய்வமே ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...