ஜல்லிக்கட்டு கவிதை



பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி 
 சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா 
மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் 
அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா 
அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை 
சும்மா அதிருதுடா

பால் குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா 
அது தான் தமிழ் மரபின் கெத்துடா 
புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா 
தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி 
நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா 
நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா

பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி 
பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா 
ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை 
எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா 
குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே 
குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா 
-20.1.17

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145