| புயல் காற்றை |
| தடுக்காத அறிவியல் |
| சேதமாகும் நகரங்கள் |
| அழிக்கப்படும் இயற்கை |
| விசமாகும் உணவு |
| ரசாயன விவசாயம் |
| நுரையலை இல்லாமல் |
| கரையைக் கடக்கிறது |
| பாலைவனப் புயல் ! |
| சலவை தொழிலாளி வீட்டில் |
| குவிந்து கிடக்கிறது |
| அழுக்கு மூட்டை |
| கிழிக்கப்பட்டது |
| அம்மாவின் சேலை |
| தாவணியில் மகள் ! |
2017 பிப்ரவரி மாத கவிச்சூரியன் மின்னிதழில் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதை
![]() பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி |
| சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா |
| மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் |
| அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா |
| அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை |
| சும்மா அதிருதுடா |
பால்
குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா
|
| அது தான் தமிழ் மரபின் கெத்துடா |
| புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா |
| தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி |
| நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா |
| நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா |
பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி |
| பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா |
| ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை |
| எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா |
| குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே |
| குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா |
| -20.1.17 |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதை
| தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
| தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
| பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
| புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
|
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
| முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
| வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
| வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நடுநிசி உலா ஹைக்கூ இதழ் எண் .02
| பூத்து குலுங்கும் மொட்டுக்கள் |
| கருகியது ... |
| பள்ளி வாகனம் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதைகள்

| வியப்பிலோ காவல் படை அதில் |
| வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
| அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
|
வாடி வாசல் திறக்க நடை இதை |
| வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பழைய ஞாபகம் !
| பேனாக்களை |
| தூசி தட்டிப் பார்த்தேன் |
| கிடைத்தது |
| துருப்பிடித்தக் கவிதை ஓன்று |
| கசக்கி எறிய முற்படுகிறேன் |
| சாம்பலானது |
| பழைய ஞாபகம் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எழவு காத்த கிளி !

ஆதி மனிதன் விவசாயத்தை
|
| பாதி விவசாயமாக மாற்றிய |
| விஞ்ஞாத்தை எடுத்துக் கொண்டு |
| அடுத்த வேளை பசிக்காக |
| கொடுத்த வேலை போதுமென்று |
| ஓடிக்கொண்டிருக்கிறோம்
.... |
உடுத்த உடை இருக்க இடம்
|
| கொடுத்தவரெல்லாம் உரிமை |
| கொண்டாடி உயர்ந்து நிற்பதைக் கண்டு |
| பெருமை பேசி திரிகிறோம் |
ஊருக்கே படியளந்த |
| விவசாயி மட்டும் சிறுமை பட்ட |
| வெளுத்துக் கட்டிய கோமணமும் |
| பழுத்து தொங்கிய தோலுமாய் |
| உயிர் கொடுத்த மண்ணிற்கு உரமானன் |
ஆடு புல்லை மறந்தது |
| அறிவாளி தாய் நாட்டை இழந்தான் |
| மூடன் அரசியல்வாதியானான் |
| மாடு ஜல்லிக்கட்டுக்கு போராடுது |
| மக்கள் சின்னம்மாவை சீராட்டுது |
கொலை கொள்ளையில் |
| சுற்றி வருகிறது நாளிதழ் |
| சிலை கடத்தலில் |
| சின்னா பின்னமாகுது கோயில் |
| அல்வா கொடுக்குது சினிமா |
| ஆண்டவன் கொடுக்கிறது இனிமா |
அடிச்சு பேஞ்ச மழையில |
| புடிச்ச வேரும் பொளந்துருச்சி |
| வேற பொழப்ப தேடி போகாம |
| மரத்தை வைக்க கிளம்பியாச்சு |
| பணத்த வச்ச முதலையெல்லாம் |
| பக்குவம மாத்தியாச்சு பழசு இப்போ புதுசாச்சு |
| ஏர் பூட்டியவன் கதை மட்டும் |
| எழவு காத்த
கிளியாச்சு
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் ஜனவரி 2017
| புகைப்படம் எடுக்காதீர் |
| கோயில் கருவரையில்... |
| உள்ளே நிழற்பட கருவி! |
| பூத்து குலுங்கும் மொட்டுக்கள் |
| கருகியது .... |
| பள்ளி வாகனம் ...! |
| தொட்டி நீரில் |
| துள்ளி குதிக்கும் மீன்கள் |
| குழந்தையின் கைவிரல் |
| நாணய விலக்கல் |
| சிக்கி தவிக்கும் |
| இந்திய சிப்பாய்கள் |
| கூரை வீட்டில் |
| சறுக்கி விளையாடுகிறது |
| மழைத்துளிகள் ...! |
| ஏழையின் கண்ணீரில் |
| உயிர் வாழ்கிறது |
| திமிங்கலம் |
| கலைத்துப் போட்ட குப்பை |
| குண்டு மணியானது |
| தொட்டில் குழந்தை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இதய அ றையில்
| நேசித்து விட்ட இதயத்தை |
| யோசித்துப் பார்த்தேன் மீண்டும் |
| நேசிக்கச் சொன்னது சரி |
| சாதித்தப் பின் |
| யோசிக்கலாம் அதுவரை |
| சற்று ஓய்வெடு என் |
| இதய அறையில் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஜனவரி 2017 மாத மின்னிதழ்
| என்னோடு நிழல் |
| சேர்ந்தே பயணிக்கிறது |
| சூரிய ஒளி ! |
| ஆலயப் பணி |
| செருப்பு கால்களுடன் |
| வேலையாட்கள் ! |
| சிலை வைக்காமலே |
| உயர்ந்து நிற்கிறது |
| தோல்வி ! |
| பாசத்தோடு |
| கதை சொன்ன பாட்டி |
| முதியோர் இல்லத்தில் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கொட்டும் மலை அருவி விழுந்து ஓடுகிறது மனங்களின் மகிழ்ச்சி தினம் தினம் தத்தெடுக்கிறேன் ...
-
ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சொல்லிவிட்டான் உன்னை மணந்த பிறகும் வரும் மான்களையும் வேட்டையாடும் வேட்டை நாய் நானென்ற பின்ப...
