ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

கோவம் சாவம் 
ஆனந்த உலகத்தின் 
இருபடியானது ...!
சிந்தும் மழைத்துளி 
நாற்றங்காலில் தவிக்கும் 
தவளை ...!
இடைத் தேர்தல் 
இழுத்துப் போர்த்திக்கொண்டது 
சேலை ...!
தர்மத்தின் 
உயிர் அழிந்தது 
'அ' தர்மம் ...!
பேச துடிக்கிறது இதம் 
பொய் சொன்னது 
காதுகள் ...!
களத்தில் நிலவு 
பசி மறக்கும் 
பறவைகள் ...!
வரம் கொடு இறைவா 
விரதமும் பாரதமும் 
ஏழைக்கென்று  ...!
சமூகத்தின் சாரால் 
நனையவில்லை 
ஏழை வயிறு ...!
கடலைத் தின்று 
ஏப்பமிட்டான் 
எமதர்மன் ...! சுனாமி )
சீறிவரும் சீருடைகள் 
சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் 
இளைய சமுதாயம்
பயந்தாங்கொல்லி 
கொள்ளி வைக்கிறது 
சாதியதீ  ...!
ரயில் பயணம் 
ஏறி இறங்குகிறது 
சருகுகள் ...!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145