அழகிய காடே

அழகிய காடே
அகமும் புறமுமாய் 
அசையும் கிளையே
பூத்து குலுங்கும் மலரே
புத்துணர்சி தரும் அருவியே
கிளிகள் பாட மயில்கள் ஆட
வேட்டையாடும் விலங்குகளுக்கு
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே
பழமோ காயோ 
பசித்துண்ணும்
பகலை படமெடுக்கும் 
நீர் வீழ்ச்சியே
குரல் வளையை 
அறுக்க கிறுகிறுக்கும் 
மூங்கில் காடே
முந்தான முகிலில் 
முகம் பார்க்கும் 
வானவில்லே
வரப்புக்குள்ளே 
வாய் சவடால் 
அடிக்கும் நாரையே
நடந்து ஓடும் 
விட்டில் பூச்சியின் 
விருந்தினமே
வளைந்து நெழிந்து
வான் நோக்கா
பாம்பினமே
இலைகள் சலசலப்பில்
இயற்கையாய் நீந்தும்
மீனவளே
தூரத்து ரயிலோசையில்
சடசடவென இறகு விரிக்கும்
பச்சிகளே
வில்லும் அம்பும் 
தைக்காத ஈரத்தில்
காதல் சுவடுகள் பதித்த 
மரம் கொத்தியே
ஆகா இவ்வளவு 
அழகான உன்னை 
இன்டர்னெட் உலகத்தில் 
கண்டு கழித்த யெனக்கு
இதயம் மட்டு எப்படி 
இயற்கையானது !

1 comment:

  1. சிறப்பான வரிகள்
    சிந்திப்போம்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145