கோயில் மணியோசை ...!

ஒரே அலறல் சத்தம் கேட்டு எழுகையில் எனது ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்தில் நால்வரும்  மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு சிறு புன்னகையுடன் கோயில் வாசலை நோக்கி விரைந்தேன் அங்கே சிலுவையில் அறைந்த கடவுளை கண்டு "பாவத்தின் சம்பளம் மரணம்" நிஜம் தான் என்பதை இன்று உணர்கிறேன்  தகப்பனே என்ன காலம் தான் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என்று விட்டிற்கு வந்தாள் 
அங்கே அக்கம் பக்கத்தினர் அந்த விபத்தில் ஒருவர் 24 மணி நேரம் கெடுவில் இருப்பதாகவும் மற்ற இருவருக்கு தலையில் பலத்த காயம் அறுவை சிகிக்சை செய்ய இரண்டு லாசம் தேவை அடுத்து அவர்களுடன் வந்த சிறு குழந்தையும் மயக்கத்தில் இருக்கிறது எல்லாம் அவர்கள் செய்த பாவம் என பேசிக்கொண்டனர் 
இப்போது ஹவுஸ் ஓனரின் மகன் பணத்திற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான் இறுதியில் வீட்டை விற்க முடிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அங்கு அவன் மாமா 24 மணி நேர கெடு முடிந்து இருந்துவிட்டார் கொண்டு சென்ற பணத்தில் 2.5 லட்சம் கட்டி பாடியை அடக்கம் செய்தான்
அடுத்து அவனின் அம்மா மற்றும் அக்கா இருவருக்கும் அறுவை சிகிக்சை செய்ய 2.5 லட்சம் கட்டிவிட்டு வெளியில் அமர்ந்தான் டாக்டர் வந்து ஸாரி நங்கள் முயற்சி செய்தும்  பலன் அளிக்கவில்லை இருவரும் உயிர் துறந்தனர் இந்த  பாடியை வாங்க 5 லட்சமும் அத்துடன் குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் செலவு 50 ஆயிரத்தையும் சேர்த்து காட்டுங்கள் என்றதும் பணத்தைக் கட்டி இறுதிச்சடங்கை முடித்தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவள் கொடுத்த சாபம் தான் இதற்குமேலுமா அவள் கடனை கொடுக்க வேண்டும்  கூடாது என யோசிக்கையில் 
வீட்டின் பேரில் கடன் கொடுத்தவர்கள் வந்து 3 மதம் அவகாசம் கொடுத்தார்கள் அவனும் சரி என்றான்
இரண்டும் மாதம் கடந்தது அந்த பணக்காரர் பேசிய தொகை போக மீதி பணத்தை கொடுத்தார் அதில் கொஞ்சம்  பணம் குறைவாக இருந்தது ஏன் என கேட்டதும் நீ வாங்கியக் கடனை கொடுத்துவிட்டேன் நீ ஏமாற்றியது போல் நானும் அவர்களை ஏமாற்ற தயாராகவில்லை இந்த வீட்டை காட்டி தானே கடன் வாங்கினாய் அதான் நானே அந்த கடனை அடைந்துவிட்டேன். ஏனா  எங்கள் தலைமுறையாவது நல்லா இருக்க வேண்டுமே அதற்கு தான். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்துவிடு என பேசி திரும்புகையில் அவனது முடிவை அமோதிப்பது போல தூரத்தே கோயில் மணியோசை கேட்டது. 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145