எங்கள் தாய்மொழி !

செம்மொழியான தமிழ் மொழி எங்கும் 
செழித்து வளரும் முதல் மொழி 
அகரம் படைத்த அடைமொழி -எங்கள் 
அகிலம் போற்றும் ஒரே மொழி - அது எங்கள் தாய்மொழி

ஓவியனின் மொழியை உதிரத்தில் படைத்தான்  
காவியனின் மொழியை கற்பனையில் வளர்த்தான் 
வியர்வையின் மொழியை பசியில் மறைத்தான் 
விதியின் மொழியை எதனில் வைத்தானோ !

அறிவின் மொழியை ஞானத்தில் புதைத்தான் 
அன்பின் மொழியை இறக்கத்தில் அணைத்தான் 
உறவின் மொழியை ஜாதியில் திணித்தான் 
உள்ளத்தின் மொழியை எதனில் வைத்தானோ !

பிறப்பின் மொழியை அழுகையில் இணைத்தான்  
பிரிவின் மொழியை நொடியில் மறைத்தான் 
கனவின் மொழியை விடியலில் முடித்தான் 
கடலின் மொழியை எதனில் வைத்தானோ !

ஒழுக்கத்தின் மொழியை கல்வியில் விதைத்தான் 
அறத்தின் மொழியை ஆழியில் மடித்தான் 
இயற்கையின் மொழியை பசுமையில் ரசித்தான் 
ஏழ்மையின் மொழியை எதனில் வைத்தானோ 

தேவனின் மொழியை மௌனத்தில் உரைத்தான் 
தேகத்தின் மொழியை காதலில் இசைத்தான் 
யாக த்தின் மொழியை நீதியில் எரித்தான் 
யார் மொழியின் இறப்பை எதனில் வைத்தானோ ! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145