மரணித்தவர் என் தந்தை இன்று |
மலர் விழி சுடுகின்றது |
கைகளுக்கு ஊனமில்லை அவர் |
கால்களுக்கும் ஊனமில்லை இறைவா |
இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை |
இறுதிவரை அழுக விட்டாயோ ! |
காக்கைக்கும் மரணமுண்டு அதன் |
கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பூக்களுக்கும் மனமுண்டு அதைப் |
புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா |
ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை |
ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பசுவுக்கும் மடியுண்டு அதன் |
பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா |
நாய்களுக்கும் நன்றியுண்டு அதன் |
எதனுடன் எதை மறைத்தாலும் |
என்னுயிர் துடிக்கின்றது இறைவா |
சொல் இம்மரணம் விதியா இல்லை |
நான் செய்த பிழையா |
அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் |
இல்லை விதியென |
ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் |
எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் |
அப்பா - பாடல் !
Labels:
இரங்கல் கவிதை

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
கலங்கினேன்...
ReplyDeleteகலங்கியமைக்கு நன்றிகள் அண்ணா
Delete