அப்பா - பாடல் !


மரணித்தவர் என் தந்தை இன்று
மலர் விழி சுடுகின்றது
கைகளுக்கு ஊனமில்லை அவர்
கால்களுக்கும் ஊனமில்லை இறைவா 
இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை
இறுதிவரை அழுக விட்டாயோ !
காக்கைக்கும் மரணமுண்டு அதன்
கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா 
பூக்களுக்கும் மனமுண்டு அதைப் 
புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா 
ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை 
ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா 
பசுவுக்கும் மடியுண்டு அதன்
பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா 
நாய்களுக்கும் நன்றியுண்டு அதன்  
நலமதில் தீங்கை ஏன் மறைத்தாய் - இறைவா 
எதனுடன் எதை மறைத்தாலும் 
என்னுயிர் துடிக்கின்றது இறைவா
சொல் இம்மரணம் விதியா இல்லை
நான் செய்த பிழையா 
அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் 
இல்லை விதியென நீயுணர்த்தினால் பிழைத்திருப்பேன்
ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் 
எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் 

2 comments:

  1. Replies
    1. கலங்கியமைக்கு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145