மரணித்தவர் என் தந்தை இன்று |
மலர் விழி சுடுகின்றது |
கைகளுக்கு ஊனமில்லை அவர் |
கால்களுக்கும் ஊனமில்லை இறைவா |
இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை |
இறுதிவரை அழுக விட்டாயோ ! |
காக்கைக்கும் மரணமுண்டு அதன் |
கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பூக்களுக்கும் மனமுண்டு அதைப் |
புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா |
ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை |
ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பசுவுக்கும் மடியுண்டு அதன் |
பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா |
நாய்களுக்கும் நன்றியுண்டு அதன் |
எதனுடன் எதை மறைத்தாலும் |
என்னுயிர் துடிக்கின்றது இறைவா |
சொல் இம்மரணம் விதியா இல்லை |
நான் செய்த பிழையா |
அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் |
இல்லை விதியென |
ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் |
எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் |
அப்பா - பாடல் !
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
கலங்கினேன்...
ReplyDeleteகலங்கியமைக்கு நன்றிகள் அண்ணா
Delete