| கடவுளின் காலடி |
| செருப்பாக தேய்கிறது |
| பக்தையின் பாதம் |
| நூறு நாள் போராட்டம் |
| கூலியாக.... |
| துப்பாக்கி சூடு |
| கழட்டி விட்டும் |
| ஜோடி மாறாமல் கிடக்கிறது |
| காதறுந்த செருப்பு |
| புலி வந்த தடத்தில் |
| மான் வேட்டை |
| இறந்தது முயல் |
| வளையல் ஓசை |
| மெல்ல மறைத்தது |
| வானவில் |
| இரங்கல் மாலை |
| சிரித்தபடி அசைகிறது |
| மயானத்தில் |
| நீண்ட வரிசையில் யாசகன் |
| குறுக்கே புகுந்தது |
| கட்டெரும்பு |
| உயிர் சேதம் ஆன பின்பும |
| சித்ரவதை |
| தூத்துக்குடியில் |
| நகரும் நிலா |
| நாலாபுறமும் |
| ஒரே வெளிச்சம் |
| லேசான மழை |
| பலமாக நனைகிறது |
| குழந்தையின் மனம் |
| வெந்த சோறு |
| விஷமாக மாற்றியது |
| ஸ்டெர்லைட் |
தமிழ்நெஞ்சம் - ஜுலை 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
உண்மை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete