| ஒரே கருவறையில் |
| மலர்ந்த இரு வேறு |
| கை ரேகைகள் |
| நாற்காலி சண்டையில் |
| தெரிகிறது |
| கோடரியின் பகை ! |
| வரப்புகள் நடுவே |
| சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
| பெருச்சாளிகள் |
| உடைந்த கண்ணாடிக்கு |
| நடுவே தெரிகிறது |
| பல புதிய முகம் |
| சிவப்பு கம்பள விரிப்பில் |
| தூங்கிக் கொண்டு இருக்கிறது |
| பல சாதனை விருதுகள் |
| உறைபனி காலம் |
| பளபளப்பாக மின்னுகிறது |
| வானவில் |
| வயதானாலும் |
| இளமையான காற்றை தருகிறது |
| மரங்கள் |
| கன்று ஈன்ற வாழை மரம் |
| முணுமுணுத்தபடியே செல்கிறார் |
| மாமியார் |
| கழட்டி விடட செருப்பில் |
| ஒட்டிக்கொண்டிருக்கிறது |
| செருப்பு தைத்தவனின் வடு |
| புன்னை மரத்தடியில் |
| அழுதுகொண்டிருக்கிறது |
| ஒரு பறவை |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...