| ஒரே கருவறையில் |
| மலர்ந்த இரு வேறு |
| கை ரேகைகள் |
| நாற்காலி சண்டையில் |
| தெரிகிறது |
| கோடரியின் பகை ! |
| வரப்புகள் நடுவே |
| சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
| பெருச்சாளிகள் |
| உடைந்த கண்ணாடிக்கு |
| நடுவே தெரிகிறது |
| பல புதிய முகம் |
| சிவப்பு கம்பள விரிப்பில் |
| தூங்கிக் கொண்டு இருக்கிறது |
| பல சாதனை விருதுகள் |
| உறைபனி காலம் |
| பளபளப்பாக மின்னுகிறது |
| வானவில் |
| வயதானாலும் |
| இளமையான காற்றை தருகிறது |
| மரங்கள் |
| கன்று ஈன்ற வாழை மரம் |
| முணுமுணுத்தபடியே செல்கிறார் |
| மாமியார் |
| கழட்டி விடட செருப்பில் |
| ஒட்டிக்கொண்டிருக்கிறது |
| செருப்பு தைத்தவனின் வடு |
| புன்னை மரத்தடியில் |
| அழுதுகொண்டிருக்கிறது |
| ஒரு பறவை |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...