ஒரே கருவறையில் |
மலர்ந்த இரு வேறு |
கை ரேகைகள் |
நாற்காலி சண்டையில் |
தெரிகிறது |
கோடரியின் பகை ! |
வரப்புகள் நடுவே |
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
பெருச்சாளிகள் |
உடைந்த கண்ணாடிக்கு |
நடுவே தெரிகிறது |
பல புதிய முகம் |
சிவப்பு கம்பள விரிப்பில் |
தூங்கிக் கொண்டு இருக்கிறது |
பல சாதனை விருதுகள் |
உறைபனி காலம் |
பளபளப்பாக மின்னுகிறது |
வானவில் |
வயதானாலும் |
இளமையான காற்றை தருகிறது |
மரங்கள் |
கன்று ஈன்ற வாழை மரம் |
முணுமுணுத்தபடியே செல்கிறார் |
மாமியார் |
கழட்டி விடட செருப்பில் |
ஒட்டிக்கொண்டிருக்கிறது |
செருப்பு தைத்தவனின் வடு |
புன்னை மரத்தடியில் |
அழுதுகொண்டிருக்கிறது |
ஒரு பறவை |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...