| பழுத்த இலையின் மேல் |
| துள்ளிக்குதித்து விளையாடுகிறது |
| விட்டில் பூச்சி |
| உழுத நிலத்தில் |
| அடுக்கடுக்காய் தெரிகிறது |
| கட்டிடங்கள் |
| எமதர்மனின் ஆயுள் |
| கூடிக்கொண்டே செல்கிறது |
| மரணத்தின் வாயிலாக |
| நகரத்தை நோக்கி |
| மெல்ல நகர்கிறது |
| வன விலங்குகள் |
| அழகின் பரிசத்தை |
| ஒவ்வொன்றாக விளக்கியது |
| எதிரே உள்ள கண்ணாடி |
| புதுப் புதுப் மலர்கள் |
| பூத்துக் குலுங்குகிறது |
| முதியோர் இல்லத்தில் |
| திருவிழா கூட்டம் |
| கூடவே வருகிறது |
| மதுக்கடை வாசம் |
| அடகு கடையில் |
| மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது |
| அம்மாவின் தாலி |
| இரு தை மாற்றம் |
| வழி பிறக்காத |
| முதிர் கன்னி |
| நன்றி செய்தவரை |
| ஒதுக்கி வைத்தது |
| ஒட்டுண்ணிகள் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...