விண்ணில் தெறிக்கும் |
சூரியன் வரவில் |
செலவானது எனது |
காலைக் கடன் |
கருணையுடன் முடித்து வைத்த |
உணவுத்துறை |
எழுச்சி முகமாய் தொடரும் |
கல்விப் பணி |
மாமியார் மருமகள் |
கூட்டு முயற்சி |
மாமனாரின் சமூகப் புரட்சி |
அலுவலகப் பட்டி மன்றம் |
ஆண் ஆதிக்கத்திலும் சிறு |
அகிம்சை அன்பு |
இதெல்லாம் முடித்தப் பின் |
ஈவு மீதிக்கு எடுத்துச் |
சென்றது … |
மாலை நேர சுற்றுப் பயணம் |
மதிமயக்கும் மல்லிகை வாசம் |
சுட்டெரிக்கும் மணல் மேடு |
கைம்மாறு கருதாமல் |
கருங்கல்லைக் கட்டி அணைக்கும் |
கடல் அலை |
தும்பிக்கையாய் மாறி |
நம்பிக்கை நீர்தெளிக்க |
சுற்றத்தைவிட இன்பம் |
வேறில்லை என்று |
ஐயம் தெளிந்து |
புன்னகைத்தாள்! (http://www.vallamai.com/?p=68102) |
கடல் அலை ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சிறந்த பதிவு
ReplyDelete