கடல் அலை ...!

a lady near the tides


விண்ணில் தெறிக்கும்
சூரியன் வரவில்
செலவானது எனது
காலைக் கடன்

கருணையுடன் முடித்து வைத்த
உணவுத்துறை

எழுச்சி முகமாய் தொடரும்
கல்விப் பணி

மாமியார் மருமகள்
கூட்டு முயற்சி

மாமனாரின் சமூகப் புரட்சி

அலுவலகப் பட்டி மன்றம்

ஆண் ஆதிக்கத்திலும் சிறு
அகிம்சை அன்பு

இதெல்லாம் முடித்தப் பின்
ஈவு மீதிக்கு எடுத்துச்
சென்றது …

மாலை நேர சுற்றுப் பயணம்
மதிமயக்கும் மல்லிகை வாசம்

சுட்டெரிக்கும் மணல் மேடு
கைம்மாறு கருதாமல்
கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
கடல் அலை

தும்பிக்கையாய் மாறி
நம்பிக்கை நீர்தெளிக்க

சுற்றத்தைவிட இன்பம்
வேறில்லை என்று
ஐயம் தெளிந்து
புன்னகைத்தாள்!

(http://www.vallamai.com/?p=68102)

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145