குழந்தை கவிதை ...!



நஞ்சு திங்களாகி
நவரசத் தாலாட்டில்
பிஞ்சு குழந்தையாய்
பஞ்சு மெத்தைதனில்
பாலாடை வாசம் கண்டு
கொஞ்சும் தந்தையுனை

அள்ளி அணைக்கையில்
ஆருயிர் ரெண்டும்
ஆகாயத்தைத் தொட்டது போல்

வஞ்சிய வாய்களுக்கு
வாரிசு நானிருக்கேன் என்று
செல்லச் சிரிப்பாலே
செவ்விதனில் உரைத்தவளே

எங்கள் செஞ்சோற்று
கடன் தீர்த்து தன் சோற்று
தலைமுறை காக்கும் குலமகளே
நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு !



4 comments:

  1. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  2. Anonymous6:43:00 PM

    வணக்கம்

    நெஞ்சை தொட்டுச் சென்றது கவிவரிகள் கவிதைக்கு ஏற்றால்போல் படமும் அமைந்து விட்டது பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் ரூபன்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145