காதலர் தினத்தன்று...!


காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்

அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்

பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்

பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்

அப்போதே....
இதயங்களை பரிமாருங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு

மேகத்தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145