வார்த்தை குழந்தையானாலும் |
வாழ்க்கை முடியவில்லையே ! |
நிலமங்கையின் நிழலில் நீந்தும் |
வயது மங்கையைக் கண்ட வாலிபர்கள் |
திருமண ஆசையை தூண்டி |
வெறுமன வார்த்தை தந்து |
பெருமன சிக்கலில் |
சிக்கவைப்பது ஏனோ? |
கடைவீதியில் கிடைக்கும் |
வடை காப்பிக்கு ஒரு மணி நேர |
உறவாடலில் உன் |
முழுவரிச் சோகத்தை |
சொல்லி என் அருமொழி |
வார்த்தை ஊமையாக்கியதால் |
மறுமொழி கூறாமல் |
இருவிழி கடலில் |
என் இமைகள் நீந்தியதால் |
உப்பாய் மாறிய அலைகள் |
தப்பாய் பாய்ந்ததால் |
செப்பாய் போய்விடேன் |
என் சிறுவயதை தாண்டி ... |
விதியே நீ வேல்வியாய் மாறியதால் |
தோல்வியாய் வாழ்கிறேன் |
இன்றும் முதிர்வு கன்னியாய்...! |
முதிர்வு கன்னி...!
Labels:
பெண்ணியக் கவிதை

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
இவர்களுக்குள்ள மன உளைச்சல் யாருக்கும் இருக்காது... நினைக்கும் போதே வேதனையாய் இருக்கிறது...
ReplyDeleteநிஜம் தான் இந்த மன உளைச்சல் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது என்ன செய்வது நன்றிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை தோழி
ReplyDeleteதங்கள் அன்பு வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா!
Delete