காதல் கருவறை...!


மனதோடு பேசுகிறேன்
நீ
மலரும் நினைவாய் வருவாய் 
என்று

ஆனால் 
நினைவோடு பேசிவிட்டாய் 
என் நிலலைக் கண்டு 
அன்பே

இருந்தும் 
உறவோடு பேசுகிறேன் உன் 
உறவாக ஏற்பாயா என்று

நிறைவோடு சொல்லிவிட்டாய்
நீயே 
என் நிஜம் என்று

உயிரோடு வருகிறேன் உன் 
உயிரை சுமக்க 
காதல் மனைவியாய்
உன் கருவறையில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145