வாழாவெட்டனாக !

மொட்டை வெயில் 
பட்டிக்காட்டில் 
அண்ணார்ந்து பார்த்த 
வானவூர்தியில் இன்று நான் 
அரைக்கால் டவுசர் 
முழுக்கால் பேண்ட் 
வெட்டி பந்தா 
எல்லாம் சேர்த்து 
முழுக்குப்போட்டது என்  
பள்ளிப் படிப்பை 
அரைகுறை படிப்போடு 
அயல் நாட்டைத் 
தேடிச் சென்றேன் 
முதலில் பவுசாகத்தான் இருந்தது 
பின்பு தான் புரிந்தது 
நம் சொந்தங்கள் எல்லாம் 
இந்த ஆண்ட்ராய்டு 
போனுக்குள் அடங்கியது தான்  
சொகுசு என நினைத்து 
வாழத் தொடங்கினேன் 
முதலில் இனித்தது 
பிறகு போகப்போக 
கசந்தது 
அழுதேன் 
அணைத்துக்கொள்ள 
அன்னை இல்லை 
புலம்பினே 
புத்தி சொல்ல 
தங்கை இல்லை 
சரி எல்லாம் விதி என்றேன் 
விட்டுக்கொடுக்க 
நண்பன் இல்லை 
விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் 
ஐயோ படித்திருந்தால் 
பட்டிக்காட்டிலே 
சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே 
என்ற எண்ணம் வந்துவந்து போக 
வயது முப்பதை தாண்டியது
காதல் சோகம் 
கண்ணை கிழிக்க 
வயது சோகம் 
பெண்னைக் கழிக்க
வாழ்ந்தும் வாழமலும் 
வாழ்கின்றேன்
வாழாவெட்டனாக !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145