விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்
விடியலை தந்தவள் நீயல்லவோ
படைத்தவன் துணையில் எனை வளர்க்க
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே
உடுத்தும் ஆடை அழகினிலே உன்
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான்
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன்
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன்
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ்
உலகத்தில் நானும் வளம் வரவே உன்
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன்
எல்லையில்லா தியாகத்தை அதை
எண்ணி நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா
பாலும் தேனும் கலந்தூட்டி என்
பாவக்கணக்கை முடித்துக்கொள்ள
பாவி நானும் துடிக்கிறேன் உன்
பார்வை இன்றி தவிக்கிறேன் தாயே !
விடியலை தந்தவள் நீயல்லவோ
படைத்தவன் துணையில் எனை வளர்க்க
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே
உடுத்தும் ஆடை அழகினிலே உன்
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான்
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன்
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன்
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ்
உலகத்தில் நானும் வளம் வரவே உன்
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன்
எல்லையில்லா தியாகத்தை அதை
எண்ணி நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா
பாலும் தேனும் கலந்தூட்டி என்
பாவக்கணக்கை முடித்துக்கொள்ள
பாவி நானும் துடிக்கிறேன் உன்
பார்வை இன்றி தவிக்கிறேன் தாயே !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...