சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா 
அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்தேன் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று அழுது புலம்பினாள் பாபாவோ பதில் பேசவில்லை நேராக திரும்பி தன் வீட்டிற்கு வந்தாள் சிவன்யா சிறுது நேரம் கழித்து தான் பணம் கொடுத்து உதவி செய்த வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப தருமாறு கேட்டாள் 
அதற்கு அவர்கள் பணம் கிடைக்கும் போது தான் தரமுடியும் சும்மா சும்மா வந்து கேட்காதே வீட்டை விற்ற பிறகு நாங்களே பணத்தை திருப்பி தருகிறோம் என்று மரியாதை குறைவாக பேசினார்கள்  
சிவன்யாவும் விடவில்லை நான் அப்போது பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகள் திருமணம் நடந்திருக்காது இப்போது அவளும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள் வருடமும் நான்கை தொட்டு விட்டது இனியும் காலம் கடத்தினால் நன்றாக இருக்காது ஆகவே எனக்கு பணம் வேண்டும் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றதும் 
அக்குடும்பத்தின் உன்னால் என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கோ என்று சொன்னதும் 
சிவன்யா சாபத்துடன் கடவுளை வஞ்சித்துவிட்டு வீடு திரும்புகையில் 
அக்குடும்பத்தினரின் மகன் சிவன்யா உங்கள் கஷ்டம் புரிகிறது என் அம்மா பேசியது தவறு தான் என்ன செய்வது நாங்களும் இந்த வீட்டை விற்க முயற்சி செய்கிறோம் நடக்கவில்லை இதோ இந்த அண்ணாவிடம் தான் பேசியுள்ளோம் அவர்கள் உங்களிடம் பேசுவதாக சொன்னார் இப்போது அவர் லையனில் தான் இருக்குக்கிறார் பேசுங்கள் என்றான் 
சிவன்யாவும் ஹலோ அண்ணா சொல்லுங்கள் என்றாள்  
மேடம் இந்த வீட்டை விற்க நீங்களே ஒரு நல்ல ஆளு இருந்தால் கூறுங்கள் விரைவில் பேசிமுடிப்போம் உங்கள் பணமும் கிடைத்துவிடும் இவர்கள் கடனும் அடைந்துவிடும் என்றார் 
சரி என கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் சிவன்யா 
வீட்டிற்கு வந்ததும் அங்கே ஒருவயதானவர் வந்து மகளே தயங்காதே உன் பணம் உன்னை தேடிவரும் கலங்காதே நாளை இந்த வீட்டுக்கே நீ சொந்தக்காரியாகலாம் இல்லை இதைக்கொண்டே பலமடங்கு லாபம் சம்பாதிக்கலாம் வருத்தம் வேண்டாம் என்று கூறிவிட்டு தட்சணை ஏதும் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார் 
ஒரு வேலை இது பாபாவின் அருள் வாக்கோ இருந்தாலும் இருக்கலாம் இனிமேல் நாம் கவலைப்பட வேண்டாமென்று மனதை தேற்றிக்கொண்டாள் 
திடீரென்று சிவன்யாவுக்கு  ஒரு யோசனை வந்தது ஏன் அவர் கூறியது போல் நாமே இந்த வீட்டை விலைக்கு  வாங்கிவிட்டால் என்ன என்று யோசித்தாள்  
அன்று சிவன்யாவிடம் பேசிய தரகரை அழைத்தால் இந்த வீட்டின் விலை என்ன என்று கேட்டாள் அவர்கள் 45 லட்சம் என்று சொன்னதும் சிவன்யா இவ்வளவு விலைக்கு இந்த வீடு போகாது கரணம் பொது சொத்து இன்னும் தனித்தனியாக பிரிக்கவில்லை அதுவும் போக இரண்டு பக்கமும் பொது சுவர் வண்டிகள் நிறுத்த இடம் இல்லை ஆக இந்த வீட்டை 35 லட்சத்திற்கு கேட்கிறார்கள் தர சம்மதமா என்றதும் 
அவர்கள் நாங்கள் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர் 
சரி என்று வந்துவிட்டாள் சிவன்யா 
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் சம்மதம் சொன்னார்கள் காரணம் கடன் தொகை பெருகிவிட்டது எல்லாரிடமும் இந்த வீட்டையே காரணம் காட்டி அதிக கடன் வாங்கிவிட்டதால் கிடைத்த தொகைக்கு விற்று பணத்தை வாங்கிக்கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இது சிவன்யாவுக்கு புரிந்தது உடனே சிவன்யா இந்த வீட்டிற்கு லீசு தொகை 10 லட்சம் போக மீதம் 25 லட்சம் அதில் டாகுமெண்ட் செலவு 2 லட்சம் போக மீதம் தரவேண்டியது 23 லட்சம் சம்மதமா இந்த 23 லட்சத்தை மூன்று மாத தவணைக்குள் உங்களுக்கு செட்டில்மென்ட் ஆகிவிடும் என்றாள் 
அவர்களும் சரி என்றதும் ....
வீட்டிற்கு வந்து தன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது தனது அம்மா கணக்கில் அக்கா கணக்கில், மற்றும் நகைகள் எல்லாம் சேர்த்து  கூட்டி பார்த்தால் மொத்தம் 15 லட்சம் தேறியது இன்னும் 8 லட்சம் தேவை பட்டது அது போக டாகுமெண்ட் ரெடி பண்ண குறைந்தது 2 லட்சம் தேவை பட்டது ஆக மொத்தம் 10 லட்சம் என்ன செய்வது என்று திகைத்தாள் ஆனால் சிவன்யாவின் அக்காவோ இது அகலக்கால் வேண்டாம் நம் அம்மா அப்பாவின் 60 வருட உழைப்பு தான் இந்த பதினைந்து லட்சம் இதை வீணடிக்காதே என்று சொன்னதும் 
சிவன்யா  உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா நிச்சயம் நல்லது தான் நடக்கும் நீங்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருந்தால் மட்டும் போதும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றதும்  
சிவன்யாவின் குடும்பத்தினரும் சரி நடப்பது எல்லாம் நமைக்கே என்று சிவன்யாவுக்கு உறுதுணையாக இருந்தனர் 
டாகுமெண்ட் ரெடியானது பத்திர பதிவு நடக்கும் போது தன்னிடம் உள்ள 15 லட்சத்தை தருவதாகவும் அடுத்த 8 லட்சம் ஒரு மாத தவணைக்குள் தருவதாகவும்  ஒப்புதல் பத்திரமும் எழுத பட்டது  அதன் படியே அந்த சொத்து சிவன்யாவின் பெயருக்கு மாற்றப்பட்டது உடனே அந்த பாத்திரத்தை கொண்டு சென்று வங்கியில் அடமானம் வைத்து 10 லட்சம் பெற்றுக்கொண்டாள் அப்பணத்தில் 8 லட்சத்தை முதல் சொத்து தாரருக்கு கொடுத்து அவ்வீட்டை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டாள் சிவன்யா 
பின் அங்கு லீசுக்கு இருப்பவர்களை காலி செய்ய இரண்டு மாத தவணை உள்ளது அதற்குள் இவ்வீட்டை கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்தாள் சிவன்யா புதிய சம்பு தொட்டி  , திரிபேஸ் கரண்ட், மூன்று வீட்டிற்கும் டைல்ஸ் வெளியில் கம்பிக் கேட் , புது பெயிண்ட் என்று அட்டகாசமாக மாற்றினாள் அதைக் கண்டு  அத்தெருவே அந்த வீட்டை பார்த்து அசந்து போனார்கள் 
பின்பு அவ்வீட்டை விதவிதமாக போட்டோ எடுத்து நிறைய பேரிடம் விற்க விலை பேசினாள் சிவன்யா சிலர் 40 லட்சம் 45 லட்சம் என்று சொன்னார்கள் ஆனால் சிவன்யா 50 லட்சம் தான் முடிவான விலை சம்மதம் என்றால் சொல்லுங்கள்  உடனே  ரிஜிஸ்ட்ரேஷன்  பண்ணிடலாம் என்றதும் அவ்வீட்டை வாங்குபவர் டாகுமெண்ட்டை வாங்கி பார்த்தார் எல்லாம் சரியாக இருந்தது உடனே இந்தாருங்கள் 10 லட்சம் அட்வான்ஸ் மீதி பணம் ரிஜிஸ்ட்ரேஷன் அன்று DDயாக தந்துவிடுகிறோம் என்றனர் 
சிவன்யா சந்தோசத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டு பாபாவின் கோயிலுக்கு சென்று மனதார நன்றி சொன்னாள் அன்று வரும் வியாழன் அன்ன தானமும் கொடுக்க பணம் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்த சிவன்யா  கையில் இருக்கும் 10 லட்சத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று தனது பெயரில் இருக்கும் வாங்கிக்கடனை அடைத்துவிட்டு தனது பத்திரத்தை மீட்டுக்கொண்டாள் கடைசி மூன்றாவது மாதத்தில் அந்த வீட்டை விற்பனை செய்து விட்டு மீதி தொகை 40 லட்சத்தையும் கையில் பெற்றுக்கொண்டாள் 
பின்பு இந்த 40 லட்சத்தில் தனது கை தொகை, மற்றும் லீசு தொகை சேர்த்து 25 லட்சம் போக 15 லட்சத்தில் 
ஆல்ட்ரேஷன் 4 லட்சம், பத்திர பதிவு செலவு போக லாபம் 10 லட்சம் வெறும் மூன்று மாதத்தில் எப்படி வந்தது இந்த தைரியம் எல்லாம் பாபாவின் அருள் வாக்கு தான் என்று அக்கம் பக்கத்தினரிடம் பாபாவின் மகிமையை எடுத்துரைத்தாள் சிவன்யா  
அத்துடன் தன் கையில் இருக்கும் 40 லட்சத்தை வைத்து வீடு வாங்க சொன்னார் அவளின் அம்மா அதற்கு அவள் வேண்டாம் அம்மா 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல வீடடை லீசுக்கு எடுத்துக் கொள்வோம் மீதம் உள்ள பணத்தை நால்வர் கணக்கிலும் ரூபாய் 8 லட்சம் வீதம் டெபாசிட் செய்துவிடுவோம் மதம் ஒருவருக்கு 7000 வீதம் நான்கு கணக்கிலும் சேர்த்து சுமார் 24000/-  வட்டி தொகை கிடைக்கும் அதைக் கொண்டு நிம்மதியாக காலம் முழுக்க வாழலாம் இல்லை புது வீடு தான் வாங்க வேண்டும் என்றால் அதற்கு இத்தொகை பத்தாது மீண்டும் கடன் வாங்க வேண்டும் அதற்கு வட்டி கட்ட வேண்டும் அதை விடுத்து வருடம் ஒரு முறை EB டெபாசிட், சொத்து வரி, தண்ணீர் வரி எப்படி ஏகப்பட்ட செலவு இருக்கு ஆகையால் தற்சமயம் நமக்கு சொந்த வீடு எல்லாம் வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் நிச்சயம் பாபா இதை போல் இன்னும் ஒரு நல்ல வழி காட்டுவார் என்றதும் சரி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டனர் 
சிறுது காலம் கழித்து முன் பணம் வாங்கியவர் திரும்பவும் பணம் கேட்டு சிவன்யாவிடம் வந்தனர் 
அப்போது சிவன்யா பணம் கொடுப்பேன் உன் மகள் சொல்லுவாள் எனக்கும் இப்பணத்திற்கு சம்மதமில்லை என்று, பின் அவளின் புருஷன் சொல்லுவான் என் மனைவி பெயரிலா கடன் கொடுத்தீர்கள் இல்லையே இனிமேல் அவளிடம் கேட்க கூடாது என்று மிரட்டுவான்  
உன்னுடைய இன்னொரு மகள் சொல்லுவாள் நாங்களே வரும்டம் ஒரு முறை தான் குடும்பத்தோடு என் அம்மா வீட்டிற்கு லீவுக்கு வருகிறோம் இங்கு வந்து தொந்தரவு செய்யாதே இப்பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று 
பின் நீ சொல்லுவாய் உன்னிடம் பணம் வாங்கியது தான் நான் செய்த தவறு என் எல்லா கஷ்டத்திற்கும் நீ என் வீட்டிற்கு லீசுக்கு வந்த நேரம் தான் என்று 
அடுத்து உன் மகன் சொல்லுவான் இந்த மாதம் இறுதியில் தருகிறேனென்று முடிந்து போய் கேட்டால் அடுத்த மாதம் அதற்கு அடுத்த மாதம் அப்படியே நான்கு வருடத்தையும் கழித்துவிடுவான் 
இதில் யாரை நம்பி உனக்கு உதவுவது என்று சொல் பார்க்கலாம் அன்று உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வருமானம் இல்லை இருந்தும் உன் தம்பியும் உன் தம்பி மனைவி அதாவது உன் மூத்த மகளும்  சொன்ன ஒரே வார்த்தையை நம்பி பணம் கொடுத்தேன் கரணம் கிருஸ்துவன் ஒரு சபையை  எடுத்து நடத்துபவர் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர் என்று தானே அந்த நம்பிக்கையை இன்று வரை யாராவது காப்பாற்றினீர்களா இல்லையே  
இந்த காலத்தில் 100 ரூபாய் கடனாக வாங்குவதே சிரமம் உன் மகளின் திருமணத்திற்கு முழு தொகையும் இன்னொருவர் மூலம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் நீங்கள் வட்டியும் காட்டவில்லை அசலும் கட்டவில்லை எல்லாம் என் தலையில் விழுந்தது ,கேட்டால் பணம் எப்போது இருக்கிறதோ அப்போது தான் தரமுடியும் என்று ஏளனமாக சொன்னாயே அந்த நான்கு வருடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் உன்னுடைய அத்தனை சொந்த பந்தங்களும் உங்களை சுற்றி தானே இருந்தார்கள் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அதை விடு இரண்டு மாதம் முழுக்க கரண்ட் இல்லாமல் இருட்டில் இருதோம் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அன்று தான் புரிந்தது நீ கவர்மெடேயே ஏமாற்றியது நானெல்லாம் எம்மாத்திரம் 
சரி பழசை எல்லாம் பேச எனக்கு விரும்பம் இல்லை தயவு செய்து இங்கிருந்து சென்று விடு கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன் கேள் 
நமக்கு உதவியர்களை என்றுமே நாம் மறக்க கூடாது அதே போல் நம்மை மிதித்தவர்களையும் என்றுமே மிதிக்க கூடாது என்று நினைக்கின்றேன் 
சொத்து சொத்து என்று திமிராக இருந்தாய் அதுமட்டுமா ஊரெல்லாம் கடன் வாங்கி எத்தனை பேரை ஏமாற்றினாய் அந்த பாவம் தான் என் மூலம் உனக்கு பாடம் கற்பித்துள்ளது இப்போது எந்த சொத்து உன்னிடம் உள்ளது சொல் அதற்கு ஈடாக பணம் கேட்க அன்று வாக்கு தவறாமல் நடந்திருந்தால் இன்று வழி தவறி அலைந்திடுவாயா இதெல்லாம் உனக்கு ஒரு பாடம் இனிமேல் என் வீட்டு வாசலில் வந்து நிற்காதே போ இப்போது புரிகிறதா பணத்தின் அருமையும் குணத்தின் அருமையும். என்று சொல்லி அனுப்பிய சிவன்யா 
தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று பாபாவின் முன் புலம்பினாள் காரணம் இந்த நான்கு வருடத்தில் எத்தனை கோவில்,ஜர்ச் வாசல்,விரதம் பூஜை என்று அலைந்து திரிந்திருப்பேன் மீண்டும் அதை போல் ஒரு கஷ்டத்தை எதிர் கொள்ள என் இதயத்தில் தெம்பு இல்லை பாபா அதனால் தான் அவ்வாறு கூறிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் சிவன்யா 
அருகில் இருந்த ஒரு அம்மா நீ ஏன் கலங்குகிறாய் மகளே நல்லவர்களுக்கு உதவி செய் இந்த மாதிரி தீயவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தப்படாதே இன்னும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய நன்மை தீமைகள் நிறைய உண்டு தயங்காமல் இரு வெற்றி எப்போதுமே உண்மையின் பக்கம் தான் மறந்துவிடாதே மகளே செல் என்றனர் 
சிவன்யாவும் சந்தோசமாக பாபாவை தரிசித்துவிட்டு வீடு திரும்பினாள் 
ஜெயம் 
ஓம் சாய் ராம்  சாய் இருக்க பயம் ஏன் !

1 comment:

  1. அருமையான பதிவு
    தொடருவோம்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145