புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து )வருகிறது அச் செய்தியை கண்டு கோவம் கொள்ளவில்லை சோனா தன் வீட்டில் மற்றும் சக தோழிகளிடம் வினவினாள் அவர்கள் இல்லை என்று கூற

தன் நண்பனிடமும் பானு என்ற நண்பன் இருக்கானா என்று கேட்டதும் அந்த நண்பன் ஏன் என்னை சந்தேகப் படுகிறாயா உனக்கு எந்த ஒரு ராங் கால் அல்லது மெஸேஜ் வந்தால் நான் தான் காரணமா இல்லை என் நண்பர்கள் தான் காரணமா கிராமத்து பசங்கள் தான் இப்படி செய்வார்களா ஏன் நகரத்து பசங்கள் இப்படி செய்ய மாட்டார்களா? என்று திட்ட

உடனே சோனா நான் சாதுவாக பானு என்று நண்பர் உள்ளாரா என்று தானே கேட்டேன் இதற்கு ஏன் இப்படி கோவப்படுகிறாய் உன்மீது சத்தியம் உன்னை சந்தேகப் படவில்லை நீயோ எனக்கு நல்ல நண்பன் நீ சத்தியமாக அந்த மாதிரி வார்த்தையை என்னிடம் உபயோகிக்க மாட்டாய் அப்படி இருக்க நான் ஏன் உன்னை சந்தேகப் படவேண்டும் சொல்

உடனே ராமு ஓகே ஓகே எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஏளனம் செய்கிறாயோ என்றதும்

சோனாவோ ஐயோ அப்படி சொல்லவில்லை அதில் ஐ லவ் யூ பானு என்ற குறுஞ்செய்தி இருந்ததால் அப்படி சொன்னேன் நீ என்னை தவறாகவே புரிந்து கொண்டாய் அதனால் தான் நான் எது பேசினாலும் உனக்கு தப்பாகவே தோன்றுகிறது உன்மேல் எனக்கு சந்தேகம் இருந்தால் இந்த பத்து வருட காலமாக நாம் நண்பராக இருக்க முடியாது என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டுவிட்டேன் அது தவறு என்று புரிந்துவிட்டது இதற்கு போய் என்னை பைத்தியம் மெண்டல் லூசு என்று பட்டம் கட்டிவிட்டாய் இனிமேல் உன்னிடம் எதுமே பகிர்ந்து கொள்ள மாட்டேன் ஓகே ஒன்றே ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன்

நான் கேட்டது தவறாக இருந்தாலும் நீ சொல்லியிருக்கலாம் பானு என்று எனக்கு யாரும் இல்லை ஏன் எதாவது தவறான மெஸேஜ் வந்ததா எந்த நம்பர் கொடு பார்க்கலாம் இல்லை எதாவது ஒரு எண் வித்தியாசத்தில் தவறுதலாக அவர்கள் அனுப்பியிருக்கலாம் அதை அப்படியே விட்டுவிடு இனிமேலும் போன் அல்லது மெஸேஜ் வந்தா அப்போது பார்த்துக்கலாம் ஓகே என அன்பாக கேட்டிருக்கலாம் அதை விடுத்து நெருப்பை அள்ளி கொட்டியது போல் என்னை திட்டி தீர்த்துவிட்டாய்

நாளைக்கே நான் உன்னை பற்றி தவறுதலாக பேசினேன் என்று யாராவது ஒருவர் வந்து உன்னிடம் சொன்னால் நீ என்ன ஏது என்று வினவாமல் என்னை தண்டிக்கவும் தயங்க மாட்டாய் ஆதலால் இன்றுடன் நம் நட்ப்புக்கு முற்று புள்ளி வைத்துவிடலாம் என்றதும் ராமு தனது அழைப்பைத் துண்டித்துவிட சிறு தவறால் பெரும் விளைவால் வளர்ந்த நடப்பு மௌனத்தில் பிரிந்தது !

3 comments:

  1. இன்னொரு முறை வாய்ப்பு தரலாம்...!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு தானே கொடுத்திடலாம், கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145