எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?

Related image

இந்த உலகத்தின் 
முதல் கருவை 
என்ன ஜாதி என்று கூறு 
பின் சொல்கிறேன் 
என் ஜாதியை ....?

அந்த கருவறை
குழந்தை எந்த கருவறை
குழந்தையுடன்
மணமுடித்தது என்று கூறு
பின் சொல்கிறேன்
என் ஜாதியை ...?

மணமுடித்த கையேடு
மறு சுழற்சி முறையில்
புதுப்பித்த கருவறை
என்ன உறவு என்று கூறு
பின் சொல்கிறேன்
என் ஜாதியை ...?

ஜாதி ஜாதி ...
என்று கோஷமிடும் தமிழினமே
பேரைப் போலவே ஜாதி பிரிந்தது
ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது
மதத்தைப் போலவே இனம் பிரிந்தது
இனத்தைப் போலவே மொழி பிரிந்தது
இன்னும் என்ன மூடனே

எடுத்துரைக்கிறேன் கேள்
ஒன்று இரண்டாகி
உயர்ந்து திரியும் பறவையாய்
இனம் மட்டுமே கண்டு
இன்புற்றிருந்த காலத்தில்
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?

4 comments:

  1. வணக்கம்
    சபாஸ் சரியான வரிகள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா

      Delete
  2. நல்ல கவிதை...
    சாட்டையடி.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145