புயல் காற்றை |
தடுக்காத அறிவியல் |
சேதமாகும் நகரங்கள் |
அழிக்கப்படும் இயற்கை |
விசமாகும் உணவு |
ரசாயன விவசாயம் |
நுரையலை இல்லாமல் |
கரையைக் கடக்கிறது |
பாலைவனப் புயல் ! |
சலவை தொழிலாளி வீட்டில் |
குவிந்து கிடக்கிறது |
அழுக்கு மூட்டை |
கிழிக்கப்பட்டது |
அம்மாவின் சேலை |
தாவணியில் மகள் ! |
2017 பிப்ரவரி மாத கவிச்சூரியன் மின்னிதழில் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதை
பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி |
சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா |
மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் |
அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா |
அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை |
சும்மா அதிருதுடா |
பால்
குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா
|
அது தான் தமிழ் மரபின் கெத்துடா |
புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா |
தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி |
நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா |
நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா |
பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி |
பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா |
ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை |
எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா |
குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே |
குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா |
-20.1.17 |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதை
தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நடுநிசி உலா ஹைக்கூ இதழ் எண் .02
பூத்து குலுங்கும் மொட்டுக்கள் |
கருகியது ... |
பள்ளி வாகனம் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜல்லிக்கட்டு கவிதைகள்
வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பழைய ஞாபகம் !
பேனாக்களை |
தூசி தட்டிப் பார்த்தேன் |
கிடைத்தது |
துருப்பிடித்தக் கவிதை ஓன்று |
கசக்கி எறிய முற்படுகிறேன் |
சாம்பலானது |
பழைய ஞாபகம் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எழவு காத்த கிளி !
ஆதி மனிதன் விவசாயத்தை
|
பாதி விவசாயமாக மாற்றிய |
விஞ்ஞாத்தை எடுத்துக் கொண்டு |
அடுத்த வேளை பசிக்காக |
கொடுத்த வேலை போதுமென்று |
ஓடிக்கொண்டிருக்கிறோம்
.... |
உடுத்த உடை இருக்க இடம்
|
கொடுத்தவரெல்லாம் உரிமை |
கொண்டாடி உயர்ந்து நிற்பதைக் கண்டு |
பெருமை பேசி திரிகிறோம் |
ஊருக்கே படியளந்த |
விவசாயி மட்டும் சிறுமை பட்ட |
வெளுத்துக் கட்டிய கோமணமும் |
பழுத்து தொங்கிய தோலுமாய் |
உயிர் கொடுத்த மண்ணிற்கு உரமானன் |
ஆடு புல்லை மறந்தது |
அறிவாளி தாய் நாட்டை இழந்தான் |
மூடன் அரசியல்வாதியானான் |
மாடு ஜல்லிக்கட்டுக்கு போராடுது |
மக்கள் சின்னம்மாவை சீராட்டுது |
கொலை கொள்ளையில் |
சுற்றி வருகிறது நாளிதழ் |
சிலை கடத்தலில் |
சின்னா பின்னமாகுது கோயில் |
அல்வா கொடுக்குது சினிமா |
ஆண்டவன் கொடுக்கிறது இனிமா |
அடிச்சு பேஞ்ச மழையில |
புடிச்ச வேரும் பொளந்துருச்சி |
வேற பொழப்ப தேடி போகாம |
மரத்தை வைக்க கிளம்பியாச்சு |
பணத்த வச்ச முதலையெல்லாம் |
பக்குவம மாத்தியாச்சு பழசு இப்போ புதுசாச்சு |
ஏர் பூட்டியவன் கதை மட்டும் |
எழவு காத்த
கிளியாச்சு
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் ஜனவரி 2017
புகைப்படம் எடுக்காதீர் |
கோயில் கருவரையில்... |
உள்ளே நிழற்பட கருவி! |
பூத்து குலுங்கும் மொட்டுக்கள் |
கருகியது .... |
பள்ளி வாகனம் ...! |
தொட்டி நீரில் |
துள்ளி குதிக்கும் மீன்கள் |
குழந்தையின் கைவிரல் |
நாணய விலக்கல் |
சிக்கி தவிக்கும் |
இந்திய சிப்பாய்கள் |
கூரை வீட்டில் |
சறுக்கி விளையாடுகிறது |
மழைத்துளிகள் ...! |
ஏழையின் கண்ணீரில் |
உயிர் வாழ்கிறது |
திமிங்கலம் |
கலைத்துப் போட்ட குப்பை |
குண்டு மணியானது |
தொட்டில் குழந்தை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இதய அ றையில்
நேசித்து விட்ட இதயத்தை |
யோசித்துப் பார்த்தேன் மீண்டும் |
நேசிக்கச் சொன்னது சரி |
சாதித்தப் பின் |
யோசிக்கலாம் அதுவரை |
சற்று ஓய்வெடு என் |
இதய அறையில் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஜனவரி 2017 மாத மின்னிதழ்
என்னோடு நிழல் |
சேர்ந்தே பயணிக்கிறது |
சூரிய ஒளி ! |
ஆலயப் பணி |
செருப்பு கால்களுடன் |
வேலையாட்கள் ! |
சிலை வைக்காமலே |
உயர்ந்து நிற்கிறது |
தோல்வி ! |
பாசத்தோடு |
கதை சொன்ன பாட்டி |
முதியோர் இல்லத்தில் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி