நா. முத்துக்குமார்



பணமும் வசதியும்
கொடுக்காத ஆயுளைத்  
தமிழ் கொடுத்துள்ளது
போய் வா கவிஞனே ....

மஞ்சள் காமாலை
அழித்தாலும் எங்கள்
நெஞ்சப் பாமாலையில்
குடியிருக்கும் ஆனந்த யாழையே

அனைவருக்கும் 
அடைக்கலம் உண்டு 
என அமைதியாய் உறங்கும் 
விழிகளுக்குத் தெரியும்

நாளைய 
நட்சத்திர கூட்டத்தில்
நீயும் ஒன்றென நம்பி
வழியனுப்புகிறோம்
கண்ணீர் மழையில் !!!!!

1 comment:

  1. 'அழகே அழகே'

    'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

    ஆதலால்,

    ஒரு பாவலன் / கவிஞன்

    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

    ஆயினும்

    நாமும்

    துயர் பகிருகிறோம்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145