தமிழ் வாசல் - ஜூலை 2016 !

கூறுவைத்த பூவில் 
கொட்டிக்கிடக்கிறது 
கணக்கில்லா வாசம் ...!
நாற்காலிக்குள்
ஓடி ஒளிந்து கொண்டது 
ரத்தம் குடித்த மூட்டை பூச்சி ...!
கோரைப் புல் 
மினுமினுக்கின்றது...
பனித்துளிகள் !
காலத்தின் விதியை 
எண்ணிக்கொண்டிருக்கும்
கைரேகை ஜோசியன் ...!
வர்த்தகத்திலும் வணிகத்திலும்
கொட்டிக்கிடக்கிறது 
கணித வளம் ...!
காற்றின் உராய்வில் 
மெய்சிலிர்க்கும் 
போதிமரங்கள் !
அடிமரத்திலிருந்து 
எட்டிப் பார்க்கிறது 
ஒரு துளிர் !
உடைந்த பாலம் 
ஒப்பனை செய்யும் 
தவளைகள் !
கோபுர தரிசனம் கிடைத்தும் 
யாசகம் கேட்கும்  
காம்பறுந்த பூக்கள் ...!
கூடைக்குள் பழங்கள் 
முகர்ந்து திரும்பும்... 
பறவைகள் ...!
ரசித்துக்கொண்டிருந்தேன்
பசுந்தளிரை நசுக்கியபடி 
காட்டெருமை!

4 comments:

  1. சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145