அலுப்பை போக்கும் |
அதிகாலை |
ஆண்டவன் அருளோடு |
அவளின் பயணம்…. |
இறங்க மனமில்லை |
இறங்கியது கால்கள் |
சேலை வேட்டியானது |
செஞ்சிலுவை சட்டை போட்டு |
க ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க |
கடகடவென்று |
கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக் |
கதிரவன் துணைகொண்டு |
மடமடவெனக் |
கோடுபோட்ட வரப்பில் |
மஞ்சள் வெயில் மணத்தோடு |
தகதகவென மின்னும் உப்பளத்தில் |
தாகம் மறந்து |
தேகம் மெலிந்து |
சோகம் குவியும் |
சொப்பன வாழ்க்கையில் |
உடலோடு உழற்றும் |
உப்புக் காற்றில் |
கருவாடெனக் காய்ந்து |
திருவோடு அறியாத |
பிள்ளைக்காக |
தினம் தினம் வெந்து தணியும் |
வேள்வியில் |
உலகமே ருசித்திருக்க |
உள்ளம் உருகுதே எங்கள் |
உயிரும் கருகுதே |
எள்ளும் தண்ணியும் |
இறைப்பதற்குள் |
இறைவா |
எங்களை மீட்டெடுக்க வாராயோ |
இல்லை மாற்று வழி தாராயோ! |
அவளின் பயணம்….!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள்
Delete