அலுப்பை
போக்கும் |
அதிகாலை |
ஆண்டவன் அருளோடு |
அவளின் பயணம்…. |
|
இறங்க மனமில்லை |
இறங்கியது கால்கள் |
சேலை வேட்டியானது |
செஞ்சிலுவை சட்டை போட்டு |
க ஞ்சிக் கலையம் தன்
கண்மறைக்க |
|
கடகடவென்று |
கடல்நீரைத் தளங்களில்
பாய்ச்சிக் |
கதிரவன் துணைகொண்டு |
மடமடவெனக் |
கோடுபோட்ட வரப்பில் |
மஞ்சள் வெயில் மணத்தோடு |
தகதகவென மின்னும்
உப்பளத்தில் |
|
தாகம் மறந்து |
தேகம் மெலிந்து |
சோகம் குவியும் |
சொப்பன வாழ்க்கையில் |
|
உடலோடு உழற்றும் |
உப்புக் காற்றில் |
கருவாடெனக் காய்ந்து |
திருவோடு அறியாத |
பிள்ளைக்காக |
தினம் தினம் வெந்து தணியும் |
வேள்வியில் |
|
உலகமே ருசித்திருக்க |
உள்ளம் உருகுதே எங்கள் |
உயிரும் கருகுதே |
எள்ளும் தண்ணியும் |
இறைப்பதற்குள் |
|
இறைவா |
எங்களை மீட்டெடுக்க வாராயோ |
இல்லை மாற்று வழி தாராயோ! |
சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள்
Delete