ஈகை’ என்னுள் வந்ததெப்படி?



தகப்பனாட்டம்
உதவாக்கரையாக
வளர்ந்து விடாதே
என்றாள் அம்மா! 

தாத்தாவாட்டம்
தண்டமாக
வாழ்ந்து விடாதே
என்றாள் பாட்டி! 

தாயும் தந்தையும் தவிர்த்துத்
தாய் மாமனாட்டம்
சோம்பேறியாக
இருந்து விடாதே
என்றார்கள்
அக்கம் பக்கத்தினர்!  

கடைசி பெஞ்சாட்டம்
அறிவை இழந்து
முட்டாளாகி விடாதே
என்றார் ஆசிரியர்! 

ஆனால் …
யாருமே சொல்லாமல்
எனக்குள் எப்படி
வந்தது இந்த ஈகைத் திறன்?

ஒருவேளை
இந்த உலகமே
நம்
கைக்குள்  இருப்பதற்குப்
பெயர்தான்
நட்பின் சுவாசமோ !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145