சாநா பலகையில் சமதர்ம வள்ளுவனை |
வாரி
எடுத்துக் கொண்டு வஞ்சகசம்பு பொன்தாமரை
|
குளத்தில்தள்ளி
மெய்யுரைத்த பொய்யாமொழியும் நீயே
|
கனியமுது
மொழியால் வையம் ஆண்டுவான்
|
கடல்தாண்டி
ஆற்றவும் தொடுத்த வள்ளுவமாலை
|
சூடாத
வாயுமில்லை சுமக்காத ஊர்தியுமில்லையென
|
சுற்றி
திரியும் ஈரடி தந்த வாமனனும் நீயே
|
உன்குறள் அளந்து
உருவம் தரித்துத்
|
தென்குமரி
கங்கையில் தன்கடம் நனைய
|
வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து
|
வான்புகழ்
வாயுறை வாழ்த்தும் பொதுமறையும் நீயே
|
சமணனா
கிறிஸ்துவனா பௌத்தனா என்றெல்லாம்
|
சாதிபார்க்கும்
பாதகர்முன் பாலினம் இரண்டெனப்
|
பாரில்
நிரந்தரமென நகைசெய்யும் உத்தர வேதம்
|
பதினென்கீழ்கணக்கு
மடுவில் சுரக்கும் முப்பாலும் நீயே
|
காதல்
மணக்கக் கலவியின்பம் வகுத்து
|
ஓரறிவுமுதல்
ஆறறிவுவரை அறம் பெருக்கி
|
கூட்டுப்
பொருள்தன்னை கூடிவாழ் இன்பமுடன்
|
கழித்தெழுங்கும்
சமூக சீர்த்திருத்த அறிஞரும் நீயே
|
மரபுடைத்த
இலக்கண மதுதனை உண்டு
|
மாற்றங்கள்
படைக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும்
|
புதுகவி
படைக்கும் புலவனுக்கும் உன் ஏடே
|
புதுவாழ்வு
அளிக்கும் தெய்வ நூல் திருக்குறள் !
|
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து !
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...