![]() |
காலமே எதிரிபாரா கடலைஒற்ற வெள்ளமதில் |
| கரையாதுயிர் மறுபடி பிறக்க வைத்து |
| மீள்வதற்கு உணவுடை யளித்தஎம் மதங்களுக்கு நன்றி |
|
ஓடும்
வெள்ளத்தில் ஓரம் வளரும்
|
| மரமெனப் பாராமல் எல்லாம் உயிரென |
| மருத்துவம்தந்த மானம் காத்த மனங்களுக்கு நன்றி |
தொல்லை வெள்ளத்தில் துன்புற்றோரை |
| இன்புற்ற முகத்தோடு இன்னல் தாண்டி |
| வின்னில் பரந்த இராணுவ இளைஞனுக்கு நன்றி |
காரிருள் சூழ்ந்தும் கைபேசி தொடர்பற்றுக் |
| கதறும் சத்தத்தில் நன்மை தேடாது |
| கொள்ளை திருடனைத் திருத்தியக் கருணைக்கு நன்றி |
செம்பரம் பாக்கமா? தன கரம் காக்குமா? |
| யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது |
| தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி |
பன்னாட்டு வாணிபம் மல்லாது பல்நாட்டு |
| நிவாரணத்தில் பஞ்சம்போக்கி நெஞ்சம் மகிழ்ந்த |
| மனிதாபி மானத்திற்கு நன்றி |
| (12.01.15) |
பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

வணக்கம்
ReplyDeleteமனிதம்இன்னும் வாழ்கிறது... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//செம்பரம் பாக்கமா? தன் கரம் காக்குமா? யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி//
ReplyDelete:)
ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம் நன்றிகள்.
Thanks
Delete