சிறு கதை - கடிகாரம்

large picture

பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள்

அவரும் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றாரர்

இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பிவிட்டார்

ஆதி அங்கேயே தனது விடுமுறையை அழகாகவும் இனிமையாகவும் கழித்து வந்தாள்

ஒரு நாள் தாத்தா வீட்டில் இருக்கும் பழமையான கடிகாரத்தை பார்த்து எள்ளி நகைத்துவிட்டு தாத்தா தாத்தா என்று அழைத்தாள் 

தாத்தா உடனே வந்தார் 
என்னடா ஆதி என்றார் 

இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்தையும் புதுமையாக மாற்றி விட்டீர்கள் ஆனால் இந்த பழைய கடிகாரத்தை மட்டும் ஏன் குப்பையில் போடவில்லை என்றாள்

அதற்கு தாத்தா இது ஒழுங்காகத்தானே ஓடுகிறது பின் எதற்கு குப்பையில் போட வேண்டும் என்றார்
இருந்தும் பழமையாக உள்ளதே

தீடிரென்று கடிகராம் பேசத் தொடங்கியது . நானும் பல ஆண்டுகளாக நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது பேத்தியே நீயாவது ஒய்வு கொடு என்றதும்

ஆதி சிரித்தாள்

உனது புகார் தவறு எனதருமை கடிகாரமே என்று பதில் அளிக்கத் தொடங்கிய தாத்தா ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு வினாடி ஒய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயோ ?...

கடிகாரம் ஒரு நொடி யோசித்தது பிறகு மீண்டும் வழக்கம் போல் தன் பணியைத் தொடங்கியது

தாத்தாவின் அறிவுப்பூர்வமான சிந்தனையைக் கண்டு வியந்தாள் ஆதி

திடீரென்று தாத்தா சொன்னார் ஒரு ஒழுங்கு முறையிலான வேளையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக் கொன்று ஈடு கொடுத்து அமைந்தால் அந்த ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் ஏற்படும் வலியையும் போக்கிவிடும் என்பது தான் உண்மை !

பள்ளி தொடங்கும் நாள் வந்தது ஆதி தாத்தாவின் நீதிக் கதையை தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கும் உரைப்பதாக வாக்கு கொடுத்தாள்.

2 comments:

  1. வணக்கம்

    தொடக்கமும் முடிவும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145