பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது
தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள்
|
அவரும் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றாரர்
|
இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பிவிட்டார்
|
ஆதி அங்கேயே தனது விடுமுறையை அழகாகவும் இனிமையாகவும் கழித்து
வந்தாள்
|
ஒரு நாள் தாத்தா வீட்டில் இருக்கும் பழமையான கடிகாரத்தை பார்த்து
எள்ளி நகைத்துவிட்டு தாத்தா தாத்தா என்று அழைத்தாள்
|
தாத்தா உடனே வந்தார்
|
என்னடா ஆதி என்றார்
|
இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்தையும் புதுமையாக மாற்றி
விட்டீர்கள் ஆனால் இந்த பழைய கடிகாரத்தை மட்டும் ஏன் குப்பையில் போடவில்லை
என்றாள்
|
அதற்கு தாத்தா இது ஒழுங்காகத்தானே ஓடுகிறது பின் எதற்கு குப்பையில்
போட வேண்டும் என்றார்
|
இருந்தும் பழமையாக உள்ளதே
|
தீடிரென்று கடிகராம் பேசத் தொடங்கியது . நானும் பல ஆண்டுகளாக
நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன் எனக்கு மிகவும் களைப்பாக
இருக்கிறது பேத்தியே நீயாவது ஒய்வு கொடு என்றதும்
|
ஆதி சிரித்தாள்
|
உனது புகார் தவறு எனதருமை கடிகாரமே என்று பதில் அளிக்கத் தொடங்கிய
தாத்தா ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு வினாடி ஒய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயோ
?...
|
கடிகாரம் ஒரு நொடி யோசித்தது பிறகு மீண்டும் வழக்கம் போல் தன்
பணியைத் தொடங்கியது
|
தாத்தாவின் அறிவுப்பூர்வமான சிந்தனையைக் கண்டு வியந்தாள் ஆதி
|
திடீரென்று தாத்தா சொன்னார் ஒரு ஒழுங்கு முறையிலான வேளையில்
களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக் கொன்று ஈடு கொடுத்து அமைந்தால் அந்த
ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் ஏற்படும் வலியையும் போக்கிவிடும் என்பது
தான் உண்மை !
|
பள்ளி தொடங்கும் நாள் வந்தது ஆதி தாத்தாவின் நீதிக் கதையை தன்னுடன்
படிக்கும் மாணவர்களுக்கும் உரைப்பதாக வாக்கு கொடுத்தாள்.
|
சிறு கதை - கடிகாரம்
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
வணக்கம்
ReplyDeleteதொடக்கமும் முடிவும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Delete