![]() பனித்துளியாக மாறினேன் |
| என்னவள் |
| இதழ் விரிகையில் ...! |
| மின்னஞ்சல் தாக்கி |
| உயிரிழக்கவில்லை |
| கூகுள் ...! |
| வான் விழியில் |
| வர்ண ஜாலங்கள் |
| வாங்க மறுக்கும் குடை ...! |
| குளிரில் தவிக்கும் நதிக்கு |
| வெளிச்சம் கொடுக்கிறது |
| நிலவின் அரவணைப்பு …! |
| அழிவென்று தெரிந்தும் |
| ஆசை கொள்கிறது |
| அகிலம் ...! |
| ஆடும் கிளைகளை பார்த்து |
| ஓடுகிறது |
| சூரியன் ...! |
| தட்சணைச் சோற்றை தின்று |
| கொழுத்து திரிகிறது |
| கோயில் எறும்பு ...! |
| கிள்ளி எறிந்த கீரையில் |
| நிரம்பிக்கிடக்கிறது |
| அல்ல முடியாத நீர் சத்து ...! |
| கடவுளின் பெயரைச் சொல்லி |
| சாமிக்கு தாலி கட்டினார் |
| ஆசாமி ...! |
| மும்மதப் பிராத்தனை |
| சம்மதம் தந்தாள் |
| முதிர் கன்னி ...! |
| குறுகிய இரவு |
| நீண்டுகொண்டே போகிறது |
| காதலியின் ஏக்கம் ...! |
| சித்தர் மலை |
| தவமிருக்கும் |
| கஞ்சாசெடிகள் …! |
| அக்கினிப் பரிச்சை |
| வலம் வருகிறது |
| காற்று ...! |
விரல் நுனி
|
திரும்பிப் பார்த்தேன்
|
இனித்தது வாழ்க்கை ..!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விடியலின் கொடுமை !

ஒளிந்து விளையாடும்
கனவுக்கு
தெரியாது
விடியலின் கொடுமை !
தனக்குத் தானே
பேசி மகிழும்
கற்பனைக்கு
தெரியாது
காகிதத்தின் வலிமை !
இரவு பகல் பாரது
இதயம் ஏங்கும்
அழிவுக்கு
தெரியாது
கல்லறையின் பெருமை !
நினைவுகளை சுமந்து
கனவுகளில் பறந்து
இதயத்தில் அமரும்
காதலுக்கு
தெரியாது
கண்ணீரின் இனிமை !
தெரிந்தும் தெரியாமல்
அறிந்தும் அறியாமல்
அங்கிங்கும் வாடும்
உறவுக்கு
தெரியாது
காலத்தின் கடமை !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முத்தம் (முற்றம் ) ...!

காதலில் மட்டும்
குறையாத முத்தம்
கல்யாணத்திற்கு பின்
மொத்தமாக குத்தகைக்கு
எடுத்துக் கொண்டது
என் வீட்டு முத்தம் (முற்றம் )
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் மழை ...!

அலைக்கும் ஆதவனுக்கும்
உள்ள நடப்பு
ஆவியாகி
காதல் மழை
பொழிவதில் தான்
சுழல்கிறது பூமி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காலம் ...!
![]() நாள் ஈசலானது |
| வாரம் பட்டாம் பூச்சியானது |
| மாதம் கருவானது |
| இந்த மூன்றையும் |
| ஆண்டு ஆளுகிறது காதல் ...!(காலம் ) |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...

