
| பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும் |
| மதிப்பு கொடுக்கும் நீ |
| பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும் |
| மதிப்பு கொடுக்க மறந்ததேன் |
| சேலை நெய்ய பருத்தி வேண்டும் |
| ஓலை நெய்ய தென்னை வேண்டும் |
| வேலை செய்ய நிலம் வேண்டும் |
| வியர்வை சிந்த விவசாயம் வேண்டும் - நீ |
| எட்டடுக்கு
மாடியிலும் எட்டி பார்க்கும் பொன்னியரிசி
|
| நீ ஆறடி போகையிலே |
| அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி |
பாஸ்ட்
புட்டு காலமெல்லாம்
|
| பாடை கட்டப் பார்க்குது இந்த பாதை |
| மாறி வாழ்ந்து பார்த்தால் |
| பாவ மன்னிப்பு கிடைக்குது |
| ஏழு லோகம் சுத்தி வந்த |
| என்ன பெத்த ராசா நீ |
| என்னாதான் சம்பாதிச்சாலும் |
| வாயிக்கு ருசியா ஆக்கிப்போட |
| வேணுமடா அரிசி கொஞ்சம் லேசா |
| வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் |
| மாறி போனது அன்று இனி |
| வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம் |
| மாறப்போகுது இன்று |
| உழவனுக்கு திருநாளாம் அதுவே |
| ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம் |
| உழவும் இப்பே இல்லேனான நாம |
| உயிர் வாழ்வது சில நாளாம் |
| ஆடு மாடு கூட்டம் போல |
| வீடு மாடி பெருகுது குழந்தைங்க |
| ஓடி ஆடி விளையாட |
| ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது |
| சுதந்திரமெல்லாம் இயந்திரமாய் |
| மாறி வரும் காலத்தில் |
| சுகாதார கேட்டாலே |
| சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது |
| பேனா பிடிக்கும் கையாலே |
| ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ |
| ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் |
| வாழ்ந்து காட்ட வாடா |
| விவசாய விஞ்ஞனியா வாடா |
| புரட்சி செய்வோம் |
| புரட்சி செய்வோம் வாடா |
| பொன்னு விளையிற பூமியிலே |
| பொருள விளையவைப்போம் வாடா |
வணக்கம்
ReplyDeleteகாலம் உணர்ந்து கவி வடித்த விதம் நன்று பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-